உலக தேனீக்கள் தினமின்று!

உலக தேனீக்கள் தினமின்று!

தேனீக்களின் சுறுசுறுப்புக்கு மனிதனாலும் ஈடு கொடுக்க முடியாது. அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி மனித வாழ்க்கைக்கும் பேருதவியாக இருக்கிறது. குறிப்பாக விவசயிகளுக்கு இவை செய்யும் உதவி அளப்பரியது. தேனீக்களின் வாழ்க்கை முடிகிறதெனில் உங்களுக்கான அழிவும் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறவாதீர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கையை கருத்தில் கொண்டே அமெரிக்காவில் ஒவ்வொரு ஆகஸ்டு மாத மூன்றாவது வார சனிக்கிழமையை தேனீக்களின் தினமாக அறிவித்தனர். அந்தவகையில் 17-ம் தேதியான இன்று தேனீக்கள் தினத்தை உலகம் முழுவதும் அனுசரிக்கின்றனர். நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடியாகக் கருதப்படும் அன்ரன் ஜான்ஸா (Anton Janša) பிறந்த நாள் என்பதால் இந்த தேதி தேர்வு செய்யப்பட்டது.

இந்த நாளில் தேனீக்களின் பாதுகாப்பு, வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு பரப்பப்படுகிறது. தேனீக்களின் அவசியம் பற்றியும், மனித குலத்திற்கு தேனீக்கள் செய்யும் சேவை பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். சுறுசுறுப்பு, தேடல், கூட்டு முயற்சி என தன்னுடைய வாழ்க்கைமுறையின் மூலம் மனிதர்களுக்கு பாடம் சொல்கின்றன தேனீக்கள்.

மனிதனுக்கு எல்லா வகையிலும் முன்னோடியாக இருப்பது தேனீக்கள்தான் என்றால் நம்ப முடிகிறதா.. நம்பமுடியவில்லை என்றாலும் அதான் நிஜம்.. அந்த நிஜத்தின் தொகுப்பு இதோ…

“சதுரமான ஓர் அறையைவிட, அறுங்கோண வடிவமுள்ள அறையில்தான் அதிக இடவசதியிருக்கும்கறதால, அந்த வகையான அறைகளைப் பல விஷயங்களுக்கு மனுஷன் பயன்படுத்துகிறான். இதை அவனுக்குச் சொன்னதே, தேனீக்கள்தான். தேன்கூட்டைக் கவனிச்சுப் பார்த்தீங்கன்னா அறுங்கோண வடிவ அறைகளா இருக்கும். அதுலதான் தேனை சேமிச்சு வைக்குது தேனீக்கள். நாகரிகத்துக்கு நாமதான் சொந்தக் காரங்கன்னு சொல்லிகிட்டு அடிதடி, ஜாதி, மத சண்டை, வன்முறையை வளர்த்துகிட்டிருக்கோம். இன்னிக்கும் கூட்டு வாழ்க்கை முறையைச் சரியா கடைப்பிடிக்குறது பூச்சிகள் மட்டும்தான். எறும்பு, கறையான், தேனீ, குளவினு கூட்டம் கூட்டமா உண்டு, உறங்கிக் காலத்தைக் கழிக்குதுங்க அந்தப் பூச்சிகளெல்லாம்.

தேனீக்களோட வாழ்க்கைமுறையைப் பார்த்தா, `ஆறறிவு படைச்சவர்கள் மனிதர்கள் மட்டுமே… என்று சொல்லவதை தவிர்த்து விடுவோம். ஆம்.. ஒவ்வொரு கூட்டிலும் ஆயிரக்கணக்கான தேனீக்கள் இணைந்து வாழ்ந்தாலும் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு குழுவை அமைத்து, மனுஷ ஜென்மத்தை விட தெளிவான பாதையில் செயல்படுகின்றன தேனீக்கள்.

அதாவது கூட்டிலிருந்து எந்தத் திசையில, எவ்வளவு தூரத்துல, எந்தப் பூவுல தேன் இருக்குதுங்கிறதைப் பார்த்துட்டு வந்து, அதை நடன மொழியில சொல்றதுக்காகத் தகவல் தொடர்புக்குழு.

சொல்லப்படும் தகவலைப் போய்ப் புரிந்து, அவைகள் சொன்ன திசையில் போய், தேனை எடுத்து கொண்டு வரும் பொருள் சேகரிக்கும் குழு; தேனை எடுக்கப் போய், குறிப்பிட்ட பூவில் உட்கார்ந்ததும் அதில் இருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தால (ரசாயனங்கள் உள்ளிட்ட) உடம்பு சரியில்லாம போய் விடும் தேனீக்களுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவக்குழு; மருத்துவத்துக்குப் பயனில்லாம இறந்து போற தேனீக்களைக் கூட்டிலிருந்து அப்புறப்படுத்தும் துப்புரவுக் குழு; இளம் தேனீக்களைப் பராமரிக்கும் தாதிக்கள் குழு… இப்படி ஒரு ஒழுங்குடன் தேனீக்கள் வாழும் வாழ்க்கையைப் பார்த்தா, நாமெல்லாம் சும்மா..?’ என்று வாய்விட்டு சொல்ல தோன்றுகிறது.

ஒரு கூட்டில் ஆயிரக்கணக்கான தேனீக்கள் இருந்தாலும், ராணித்தேனீ, ஒரே ஒரு ஆண் தேனீயுடன் ஒரே ஒருமுறை மட்டுமே கூடி, வாழ்நாள் முழுவதும் முட்டையிடும். ராணியுடன் கூடின அந்த ஆண் தேனீ, உறவு முடிஞ்சதும் இறந்து விடும். அதன் பிறகு அந்த ராணித் தேனீ வேறெந்த ராஜாவோடவுனும் கூடாது. இப்படியொரு ஒழுங்கு, அவைகளின் வாழ்க்கையில இருப்பதைக் கேட்டால் பிரமிப்பாக இருக்கும்.

இப்படியெல்லாம் கட்டுப்பாட்டோட வாழுற அந்தத் தேனீக் கூட்டம், முழுக்க முழுக்க வாழுறது தனக்காக இல்லை என்பதுதான் நிஜம்… ஊருக்காக, உலகத்துக்காக. பல்வேறு ஜீவராசிகளுக்காக அவைகள் வாழ்கின்றன. அதாவது அயல் மரகந்தச் சேர்க்கை மூலமாக தாவர இனங்களை வாழ வைக்கிறது. ஆடு, மாடு, மனுசன், புழு, பூச்சினு பல ஜீவராசிகளுக்கும் உணவு கிடைக்கிறதே இந்தத் தாவரங்களாலதானே! அதை விவசாயம் என்னும் பேரால் ஒரு தொழிலாக்கி, காலம் காலமாக செய்து கொண்ருக்கிறோம். உலகத்துல இருக்கற அதி உன்னதமான புனிதத் தொழிலில், முதலில் இருக்கும் ஒரு தொழில் என்றால்… தேனீக்கள் செய்யும் மகரந்தச் சேர்க்கையைச் சொல்லலாம். கிட்டத்தட்ட நாம செய்துகிட்டிருக்கிற விவசாயத்துக்கும் மேலான தொழில்.

ஆகையினால்தான் இப்பேர்பட்ட தேனீக்களின் வாழ்க்கை முடிகிறதெனில் உங்களுக்கான அழிவும் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறவாதீர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கையை கருத்தில் கொண்டே அமெரிக்காவில் ஒவ்வொரு ஆகஸ்டு மாத மூன்றாவது வார சனிக்கிழமையை தேனீக்களின் தினமாக அறிவித்தனர். அந்தவகையில் 17-ம் தேதியான இன்று தேனீக்கள் தினத்தை உலகம் முழுவதும் அனுசரிக்கின்றனர். இந்த நாளில் தேனீக்களின் பாதுகாப்பு, வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு பரப்பப்படுகிறது.

error: Content is protected !!