மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அனைத்து வயதினரும் வரலாம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அனைத்து வயதினரும் வரலாம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அனைத்து வயதினரும் வரலாம் என்று கோவில் இணை ஆணையர் குமரதுரை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று அனைத்து வயது (சிறுவர்கள், முதியவர்கள் உட்பட) பக்தர்களும் அனுமதிக்கப்படுவர். இன்று காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

தரிசனத்துக்கு அம்மன் சன்னதி கிழக்குக் கோபுரம், தெற்குக் கோபுரம், மேற்குக் கோபுரம், மற்றும் வடக்குக் கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர். கோவிலுக்குள் மொபைல் கொண்டு செல்ல அனுமதி இல்லை. பூ, மாலை கொண்டு வரலாம்.

கோயிலுக்குள் அம்மன் சன்னதி கிழக்கு வாயிலுக்குள் நுழைந்து அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், இருட்டு மண்டபம், பொற்றாமரைக்குள கிழக்குப் பகுதி, தெற்குப் பகுதி, கிளிக்கூடு மண்டபம், கொடிமரம் வழியாக அம்மன் சன்னதிக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு பின் சுவாமி சன்னதிக்குச் சென்று தரிசனம் செய்து சனீஸ்வரர் சன்னதி, அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் பத்திரகாளி அருகில் உள்ள வழியில் வெளியே வந்து பழைய திருக்கல்யாண மண்டபம் வழியாக கிழக்கு வாசல் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

கோயிலில் எங்கும் உட்கார அனுமதி கிடையாது. உடல் வெப்ப பரிசோதனை கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

error: Content is protected !!