”எனக்கு ஏன் இந்த நிலை?” – த்ரிஷா அப்செட்!

”எனக்கு ஏன் இந்த நிலை?” –  த்ரிஷா அப்செட்!

நடிகை த்ரிஷா இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில்,“என்னை வாழ வைக்கும் தமிழ் இதயங்களுக்கு இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள். கடந்த ஒரு வாரமாக நான் செய்யாத தவறுக்காக ஜல்லி கட்டு விஷயத்தில் என்னை மனம் நொந்து போகும் வகையில் விமரிசித்தும் கண்டனம் தெரிவித்தும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டு வருகின்றது. நான் ஜல்லி கட்டுக்கு எதிரானவள் அல்ல என்ற என்னுடைய நிலையை நான் மிக தெளிவாக சமூக வலைதளத்தில் என்னுடைய ட்விட்டர் முலமாக தெரிவித்து இருக்கிறேன்.

trisha jan 15

நான் பிறப்பால் ஒரு தமிழச்சி, அதில் பெருமை அடைகிறேன். நான் தமிழ் சமுதாயத்தையும், எங்கள் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பெரிதும் மதிப்பவள் .நான் பிறந்த தமிழ் சமுதாயத்தின் உணர்வுகளுக்கு என்றுமே துணை நிற்பவள், என்றுமே என் வளர்ச்சிக்கு உரமும் ஆக்கமுமாய் இருந்த தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிர் மறை கருத்துக் கொண்டவள் அல்ல.

என்னை புரிந்துக் கொள்ளாமல் என் மீது வீசப்ப படும் கண்டனங்கள் ,மிகவும் கீழ் தரமாக இருக்கிறது.அவை என்னை மட்டுமின்றி என்னை சார்ந்தவர்களையும் சொல்லொண்ணா துயரத்திலும், மன உளைச்சலிலும் ஆழ்த்துகிறது .

இந்த கண்டனங்களை நான் எதிர் கொண்டு , என் நிலையை தெளிவுப் படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுப் படும அதே நேரத்தில் சில விஷமிகளால் என்னுடைய ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டது. அந்த விஷமிகள் என் ட்விட்டர் வழியாகவே , நான் தமிழ் மக்களை பற்றி சொன்னதாக ஒரு தவறான கருத்தை பதிவு செய்தனர். இதன் மூலம் என்னை தமிழக மக்களிடம் இருந்து பிரிக்கும்எண்ணம் ஈடேறியதாக அவர்கள் எண்ணி இருக்கலாம். அது நடக்காது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தாலும், பிரச்சினையின் வீரியத்தை கண்டு நானே என் பாஸ் வேர்டையும் மாற்றி விட்டு,அதன் தொடர்ச்சியாக என் ட்விட்டர் பக்கத்தை , தற்காலிகமாக de activate செய்து விட்டேன்.

நானிந்தக் கடிதத்தை தயார் செய்யும் வேளையில் கூட எனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட வேண்டும், எனக்கு இந்த இன்னல்கள் ஏற்பட காரணகர்த்தாக்கள் யார் என்று யோசித்தவாறேதான் இருக்கிறேன்.ஆயினும் இந்த சோதனையான கால கட்டத்தில் எனக்கு ஆதரவாய் இருக்கும் என் சக நடிகர்களுக்கும், என் நலம் விரும்பிகளுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜல்லிக்கட்டு தடை விவகாரம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களையும் விவாதங்களையும் தீவிரப்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு தடைக்கு சட்ட ரீதியில் நீதிமன்றத்தை அணுகுவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் முக்கியப் பிண்ணனியில் இருப்பது ‘பீட்டா’ அமைப்பு. சுப்ரீம் கோர்ட் தடையால் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. இந்த பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடந்தன.

ஆனால், பொங்கலுக்குள் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க வாய்ப்பில்லை என சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. இதனால் ஜல்லிக்கட்டு நடக்கும் வாய்ப்பு மங்கிப்போனதால், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், போராட்டத்தையும் வலுப்படுத்தியது.இந்த நிலையில், பீட்டா அமைப்பின் நல்லெண்ணத் தூதராக உள்ள நடிகை த்ரிஷாவின் நிலைப்பாடு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

மேலும், சிவகங்கையில் நடைபெற்று வந்த அவரது ‘கர்ஜனை’ படப்பிடிப்பில் போராட்டம் நடத்தப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.த்ரிஷாவுக்கு எதிராக தகாத வார்த்தைகளில் போஸ்டர்களும் வடிவமைத்து வெளியிட்டன. இதனால், அவர் கடும் அதிருப்தி அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!