அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம் எப்போ? : கல்வித்துறை அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம் எப்போ? : கல்வித்துறை அறிவிப்பு!

மிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கெனவே தொடங்கி அவை முடிவடைந்துவிட்ட நிலையில், அரசுப் பள்ளிகளில் இதுவரை மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை. இதுதொடர்பாக பலரும் கேள்வியெழுப்பி வந்த நிலையில், தற்போது அதுபற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் கல்வியாண்டில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதியே மாணவர் சேர்க்கை தொடங்கப்பட இருக்கின்றது. அதன்படி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

School-Academic-Calendar-Tamil

தமிழகத்தில் 10,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள், கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 13ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் வரும் கல்வி ஆண்டுக்கான ( 2022-23 ) வகுப்புகள் தொடங்க உள்ளன.

வரும் கல்வியாண்டில் 1, 6, 9, 11ஆம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை வரும் ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இடைப்பட்ட வகுப்புகளான 2, 3, 4, 7, 8, 10 ஆகியவற்றுக்கும் ஜூன் 13ஆம் தேதியே சேர்க்கை தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

மாநிலத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிவடைந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் கோடை விடுமுறையின்போதே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகே புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!