மதபோதகருக்கு 8,658 ஆண்டு ஜெயில் !- துருக்கி கோர்ட் உத்தரவு

மதபோதகருக்கு 8,658 ஆண்டு ஜெயில் !- துருக்கி கோர்ட் உத்தரவு

துருக்கி நாட்டில் பாலியல் வன்கொடுமை மற்றும் ராணுவத்தை உளவு பார்த்தல் ஆகிய குற்றங்களுக்காக மத போதகர் ஒருவருக்கு இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றம் 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.

துருக்கியை சேர்ந்தவர் அட்னான் அக்தார் (66) அவர் மதபோதகராக இருந்து வந்தார். ஏ9 என்ற தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சிகளை நடத்தி புகழ்பெற்றார். அக்தார் பழமைவாத கொள்கைகளை ஆதரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார்.

இந்த நிலையில் அவர் மீது கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை, சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது, ராணுவத்தில் உளவு பார்த்தது என பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு, இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 8,658 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உள்ளது. நீதிமன்றம் மேலும் 10 குற்றவாளிகளுக்கு 8,658 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உள்ளது.

error: Content is protected !!