அறிவிச்சிட்டுப்புட்டாருய்யா.. அமெரிக்கா அதிபர் எமெர்ஜென்சி அறிவிச்சிட்டார்!

நம் ஆந்தை ரிப்போர்ட்டர் டாட் காம் -மில் நேற்றே குறிப்பிட்டிருந்தபடி அமெரிக்கா, மெக்சிக்கோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் போதுமான நிதியைப் பெறுவதற்காக அமெரிக்காவில் அவசர நிலையை நேற்று அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்து விட்டார். டிரம்ப் தொடர்ந்து அடம் பிடித்ததால் நாடாளுமன்றத்தில் இந்த சுவர் எழுப்பும் திட்டத்துக்கு அதிபர் கேட்கும் தொகைக்கும் குறைவாக நிதி ஒதுக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சியினர் சம்மதித்தனர். இதனால், பொறுமை இழந்த அதிபர் ட்ரம்ப் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலே நிதிபெறுவதற்காக அவசர நிலையை அறிவித்தார்.கடந்த 1976ம் ஆண்டில் இருந்து அமெரிக்காவில் இதுவரை 60 முறை தேசிய அளவில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக்கும்.

அமெரிக்காவில் ஆளும் குடியரசு கட்சி, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சமீபத்தில் எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து பேச்சு நடந்தது. எல்லைச் சுவருக்காக அதிபர் டிரம்ப் 570 கோடி டாலர்கள் (சுமார் ரூ.40,300 கோடி) கோரினார். ஆனால், அதில், 137.5 கோடி டாலர்கள் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்ய ஜனநாயகக் கட்சி எம்பிக்கள் ஒப்புதல் அளித்தனர்.

அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வந்தபடி கான்க்ரீட் சுவர்களை எழுப்ப ஜனநாயக கட்சியினர் ஒப்புதல் வழங்கவில்லை. இதனால், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே நிதி ஒதுக்கீடு செய்யும் வகையில் அவசர நிலையை அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்தார்.

இதை அடுத்து அதிபர் டிரம்ப் தனக்கு இருக்கும் அரசமைப்பு அதிகாரத்தை தவறாகப் பயன் படுத்துகிறார் என்று மனித உரிமை ஆர்வலர்களும், ஜனநாயகக் கட்சி எம்பிக்களும் கண்டித்துள்ளனர்.

வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் நேற்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், “அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகள், போதை மருந்து கடத்தல்காரர்கள், கிரிமினல் குற்றவாளிகள் ஆகியோரைத் தடுக்க இந்த சுவர் மிகவும் அவசியமானதாகும். இந்த திட்டம் மிகப்பெரியது, சிறப்பு வாய்ந்தது. நிதி ஒதுக்கீடு மூலம் இந்த திட்டத்தை நான் விரைந்து முடிப்பேன். இந்தத் திட்டத்தை நீண்ட நாட்கள் கொண்டு செல்லமாட்டேன். எனக்கு முன் ஆட்சியில் இருந்த அதிபர்கள் பலர் இதற்கு முன் அவசர நிலையை பிரகடனம் செய்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, ஜனநாயகக் கட்சியின் செனட் தலைவர் ஜக் ஸ்குமர் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில்,”அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் அவசர நிலையை அறிவித்தது சட்டவிரோதம். அரசமைப்புச் சட்டத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய வன்முறை” எனத் தெரிவித்தனர். மேலும், அதிபர் டிரம்பின் அறிவிப்புக்கு குடியரசுக் கட்சி எம்பிக்கள் சிலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

aanthai

Recent Posts

பத்து தல விமர்சனம்!

சினிமாக்கள் நம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் பலமானது. அதனை உணர்ந்த கலைஞர்கள், உண்மைக் கதைகளையும், உண்மைச் சம்பவங்களையும் வைத்து…

8 hours ago

போப் பிரான்சிஸ் ரோம் மருத்துவமனையில் அனுமதி!

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

8 hours ago

பொன்னியின் செல்வன் – 2ம் பாகம்- இசை & ட்ரைலர் வெளியீட்டு விழாத் துளிகள்!

சுபாஸ்கரன் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் - 2ம் பாகம்…

9 hours ago

மூன்றாவது உலகப்போர் மூளும் : பிறகு?

இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் உலகில் நடந்த போர்களில் அதற்கு காரணம் யார் என்று பார்த்தால் கண்டிப்பாக அதன் பின்னால் அமெரிக்கா…

10 hours ago

தமிழக அரசுக்கு கிண்டி ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய ரூ. 730 கோடி வாடகை பாக்கி -மெட்ராஸ் ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு.

1777ம் ஆண்டு குதிரையேற்ற பயிற்சிக்காக துவங்கப்பட்ட சென்னை ரேஸ் கிளப்புக்கு 1946 ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கிண்டியில் 160…

1 day ago

யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் இல்லை – பேடிஎம் விளக்கம்!.

யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியான நிலையில் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள்…

1 day ago

This website uses cookies.