டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பாணை!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பாணை!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக இன்று முதல் வரும் செப்டம்பர் 9-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நேர்முக தேர்வுடைய ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கு இந்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் துணை வணிகவரி அலுவலர், சார்பதிவாளர், திரைத்துறை நன்னடத்தை அலுவலர், தொழிலாளர் துறை துணை ஆணையாளர் உட்பட 23 வகையான பணிகளில் உள்ள 1199 காலிப் பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்கான தேர்வு கட்டணத்தை செலுத்த செப்டம்பர் 11-ம் தேதி இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மை நேர்வு நவம்பர் 11-ம் தேதி காலை , மதியம் என இரண்டு கட்டங்களாக நடை பெறும்  என்று அறிவிக்கப் பட்டுள்ளது. சில பணியிடங்களுக்கான குறைந்தபட்ச வயது,தேர்வு மையங் கள், ஆன்லைன் விண்ணப்பம் உள்ளிட்ட விவரங்கள் டி. என்.பி. எஸ்.சி ( http://www.tnpsc.gov.in/ என்ற) இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

error: Content is protected !!