10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு!- தமிழக அரசு அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன. மேலும், தேர்வுகளின் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நடப்பாண்டு கல்வி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் 4வது கட்ட தளர்வுகளை வெளியிட்ட மத்திய அரசு, செப்.,21ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதியளித்தது. குறிப்பாக, 10,11,12ம் வகுப்பு மாணவர்கள் விருப்பமிருந்தால் பள்ளிகளுக்கு சென்று கல்வி பயிலாம் எனவும் அறிவித்திருந்தது. இந் நிலையில், தமிழகத்தில் வரும் அக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
அதன்படி, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கல்லூரிக்கு செல்லலாம் என்றும், மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதில், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பள்ளிக்கு அழைக்கப்பட வேண்டும்.
10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளை 2 பிரிவுகளாக பிரித்துக்கொள்ள வேண்டும்.
ஒரு நாளில் ஒரு பிரிவினர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
முதல் பிரிவு மாணவர்கள் திங்கள், புதன், வெள்ளியன்று பள்ளிக்கு வரவழைக்கப்பட்டால், இரண்டாம் பிரிவு மாணவர்கள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் பள்ளிக்கு வரவழைக்கப்பட வேண்டும்.
ஆசிரியர்களையும் இரண்டு பிரிவாகப் பிரித்து முதல் பிரிவு ஆசிரியர்கள் முதல் இரண்டு நாள்களும், (திங்கள், செவ்வாய்),
இரண்டாவது பிரிவு ஆசிரியர்கள் அடுத்த இரண்டு நாள்களும் (புதன், வியாழன்) பணியாற்ற வேண்டும்.
பிறகு முதல் பிரிவு ஆசிரியர்கள் இரண்டு நாள்களுக்குப் பணியாற்ற வேண்டும்.
10, 11, 12-ம் வகுப்பு வரை பயிலும் விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் மட்டுமே பள்ளிகளுக்கு வரலாம். ஆசிரியர்களிடம் சந்தேகங்களைக் கேட்டறிந்து செல்லலாம்.
பெற்றோரின் அனுமதி பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும், தேவைப்படின் வழக்கமான ஆன்லைன் வகுப்புகளையும் தொடரலாம் என்றும் தமிழ்நாடு அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.