பிளஸ் டூ தேர்வில் ஒரு சின்ன மாற்றம்!- அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு!

பிளஸ் டூ தேர்வில்  ஒரு சின்ன மாற்றம்!- அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு!

தமிழகத்தில் மே 3-ம் தேதி நடைபெறவிருந்த பிளஸ் 2 மொழிப்பாடத்தேர்வு மே 31-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர தேர்வுகள் ஏற்கனேவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மே 3 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பிளஸ் 2 தேர்வு திட்டமிட்ட படி நடைபெறுமா? என்ற கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்ட படி நடைபெறும் என்று தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மே 2 -ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் மே 3 -ஆம் தேதி நடைபெற இருந்த மொழிப்பாட தேர்வு மட்டும் 31 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதர தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தேர்வுகள் அனைத்தும் சமூக இடைவெளியை பின்பற்றி நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!