திருமலையில் வழங்கப்பட்டு வந்த சர்வ தரிசன டிக்கெட்டுகள் நிறுத்தம்!

திருமலையில் வழங்கப்பட்டு வந்த சர்வ தரிசன டிக்கெட்டுகள் நிறுத்தம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம் செய்வதை தவிர்க்க, ‘சர்வ தரிசனம் டிக்கெட்’ என்ற பெயரில் ஆதார் கார்டு மூலம் நேரம் ஒதுக்கீடு செய்து  டிக்கெட் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு மே மாதம் தேவஸ்தானம் தொடங்கியது. முதலில் 20 ஆயிரம் டிக்கெட்டுகளை தினமும் வழங்கும் திட்டம் தொடங்கியது. இந்த டிக்கெட்கள் திருப்பதி பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் எதிரில் உள்ள  விஷ்ணு நிவாசம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டன. திருமலையில் 8 கவுன்ட்டர்கள் அமைத்து டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது.

இந்த தரிசனத்தின் முக்கிய நோக்கமே, திருமலைக்கு வரும் பக்தர்கள், காணிப்பாக்கம், திருச்சா னூர் பத்மாவதி தாயார், சீனிவாச மங்காபுரம், கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், அப்பலாய குண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி  கோயில்களில் தரிசனம் செய்துவிட்டு நேரடியாக, டிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தால் சுமார் 2 மணிநேரத்தில் சுவாமி தரிசனம் செய்து வைப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த டிக்கெட்டுக்கு பக்தர்களிடம் இருந்து படிப்படியாக  ஆதரவு குறைவதாக கூறி டிக்கெட் எண்ணிக்கையை தேவஸ்தானம் குறைத்தது.

முதலில் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கிய நிலையில் பின்னர் திருப்பதியில் 13,500, திருமலை யில் 1500 டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் திருமலையில் உள்ள பக்தர்கள் இந்த டிக்கெட் களை பெற போதிய ஆர்வம் காட்டவில்லை  எனக் கூறி திருமலையில் வழங்கப்பட்டு வந்த சர்வ தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது இன்று முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்கள் திருப்பதியில் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது பக்தர்கள் மத்தியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Posts

error: Content is protected !!