திறப்பு விழா – திரை விமர்சனம்!
நம் தமிழத்தில் அரசுக்கு அதிக அளவில் வருமானம் பெற்றுத் தரும் துறையாக இருப்பது டாஸ்மாக். மது விற்பனையில் கிடைக்கும் பெரிய அளவிலான வருவாய்தான், அதனால் நம் தமிழக அரசு செயல் படுத்தி வரும் பல்வேறு இலவச திட்டங் களுக்கு ஆதாரமாக இருப்பது இந்த டாஸ்மாக் வருவாய்தான் என்று செய்திகள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகளும் கடுமையாக அரசு நிர்வாகத்தை விமர்சித்து வந்தன. இதனையடுத்தே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, படிப்படியாக டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும், மதுவிலக்கு தமிழகத்தில் உறுதியாக அமல்படுத் தப்படும் என்றும் அறிவிப்பு வெளி யிட்டார். அதோடு, முதல் கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடியும், விற்பனை நேரத்தைக் குறைத்தும் உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்த நிலையில், உச்சநீதி மன்றம் நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட உத்தர விட்டது. இதனையடுத்து தமிழக த்தில் மட்டும் 3303 டாஸ்மாக் கடைகள் அதிரடி யாக மூடப் பட்டன. ஆனால் தமிழக அரசுத் தரப்பில் மூடப்பட்ட கடை களுக்கு மாற்று இடம் தேடும் நடவடி க்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இப்படியான் நாட்டு நடப்பு உள்ள நிலையில் இன்று ‘டாஸ்மாக்’ எதிராக தமிழகம் முழுவதும் நடந்து வரும் மக்கள் போராட்டத்தை திரைக்கதையாக்கி, காதல் காட்சிகளுடன் பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்து ஜனரஞ்சக ‘திறப்பு விழா’ என்ற படமாக உருவாக்கியுள்ளனர். இந்த படத்தை டைரக்டர் ஹரியிடம் ‘வேங்கை’, ‘சிங்கம்’, ‘பூஜை’ போன்ற படங்களில் அசோஸியேட்டாக பணியாற்றிய கே.ஜி.வீரமணி என்பவர் இயக்கியிருக்கிறார் என்பதே பெருமைக்குரிய விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும்.
படத்தின் கதை என்ன என்று கேட்டால் பருவம் தப்பிய நிலமையில் நலிவடைந்த விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் நிறைந்த அந்த கிராமத்திலும் அரசு மதுக்கடை (டாஸ்மாக்) ஒன்று திறக்கப்பட அன்றாடம் கிடைக்கும் கொஞ்சூண்டு வருமானத்தையும் குடிக்கே கரைக்கிறார்கள் ஆண்கள் . இதன் விளைவாக பெண்களும் குழந்தைகளும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறார்கள். இதனிடையே அந்த குறிப்பிட்ட கிராமத்து டாஸ்மாக்கில்தான் ஒர்க் செய்ய வேண்டும் என்று டூட்டி கேட்டு வாங்கிக் கொண்டு வருகிறான் ஹீரோ ( ஜெய் ஆனந்த்). படு அமர்க்களமாக நடக்கும் டாஸ்மாக்கில் விற்கும்போது ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் பத்திருபது ரூபாய் அதிகம் வாங்கும் நாயகன் அந்த எக்ஸ்ட்ரா காசை சமபந்தப்பட்டவ குடிகாரர் வீட்டில் உள்ள பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கொடுத்து உதவுகிறான். .
கூடவே எல்லை மீறி குடிப்பவர்களுக்கு சரக்கு தர மறுக்கிறான் . சாம்பிளுக்கு சொல்ல வேண்டுமென்றால் மாட்டை விற்று குடிக்க வந்தவரை திட்டி, மாட்டைக் கொண்டு போய் அந்த வீட்டுப் பெண்மணியிடம் ஒப்படைக்கிறான். அவர்கள் அவனை வாழ்த்துகின்றனர். குழந்தைக்கு ஹெல்த் சரியில்லை என்பவரை ஆஸ்பிட்டல் போக பேமண்ட் கொடுப்பது வாடிக்கை.
இதனிடைடே அதே ஊரைச் சேர்ந்த பெரிசு ( ஜி எம் குமார்) மகளுக்கு (ரைஹானா) அந்த இளைஞன் மீது காதல் . ஆரம்பத்தில் அந்த காதலை நிராக்ககிறான். அதே நேரம் அரசு டாஸ்மாக் பக்கத்தில் உள்ள பாரில் வசதியும் ஆள் பலம் அதிகார பலம் படைத்த ஒரு பார்ட்டி கள்ள சரக்கு விற்கின்றனர் . அதைத் தட்டிக் கேட்கும் டாஸ்மாக் ஹீரோவை அடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கின்றனர் . வழக்கம் போல காசுக்கு அடிமையான போலீசும் அவர்களுக்கு உடந்தை . ஆனாலும் கவர்மெண்ட் ஸ்டாப் என்பதால் ஹீரோ ரிலீஸாகிறான் .இந் நிலையில் அருமை மகளின் காதல் அறிந்த பெரிசு தன் மகளை கல்யாணம் செய்து கொள்ளும்படி நாயகனிடம் கேட்க, அவனும் சம்மதிக்க, அந்த சந்தோசத்தில் மது குடிக்கும் பெரியவரும் அவரது நண்பர்களும் கள்ளச் சாராயம் எனப்ப்டும் போலி மதுவை குடித்து ஸ்பாட் அவுட் அகிறார்(கள்) .
உடனே அந்த கிராமமே சேர்ந்து நாயகன்தான் கள்ளச் சாராயம் கொடுத்து பலரைக் கொன்று , ஊரையே அனாதையாக்கி விட்டதாக குற்றம் சாட்டுகிறது . அதாவது சட்டம் அவனை விட்டாலும் மக்கள் மன்னிக்கத் தயாராக இல்லை . இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவுக்கே உரிய விதத்தில் தன் பிளாஷ் பேக் கதையை சொல்கிறான் ஹீரோ:
அதாவது இருபது வருஷங்களுக்கு முன்னாடி அதே ஊரில் நாட்டு மருத்துவம் செய்து பல உயிர்களை காப்பாற்றிய அம்மாவுக்கும் குடிகார அப்பாவுக்கும் பிள்ளையாக , ஓர் அக்காவுக்கு தம்பியாக பிறந்தவன்தான் நம்ம நாயகன். அவன அக்காவைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார் நிச்சயத்துக்குப் பிறகு, ஐந்து பவுன் அதிகம் கேட்கின்றனர் . பெண்ணுக்கும் மாப்பிள்ளையைப் பிடித்த நிலையில், அப்பாவும் அம்மாவும் மனசைக் கல்லாக்கிக் கொண்டு ஒரு காரியம் செய்கின்றனர் .
வீட்டில் உள்ள விதை நெல் களஞ்சியத்தை மொத்தமாகக் காலி செய்து அந்த நெல்லை விற்று கல்யாணத்தை முடிக்க முடிவு செய்கின்றனர் . அந்த நெல்லை விற்றுவிட்டு பணத்தோடு வரும் வழியில் டாஸ்மாக் ஒன்றை பார்த்த நயினா சபலப்பட்டு சரக்கடித்து விட்டு கையிலிருந்த மொத்த பணத்தைப் பறிகொடுக்கிறார் அப்பாலே போதை தெளிந்து நிலைமை உணர்ந்த அவர் பாலிடா; குடித்து சாக, அக்கா தூக்குப் போட்டுக் கொண்டு சாக, அம்மா அதிர்ச்சியில் சாக , அந்த வீட்டில் தப்பிய சிறுவன்தான் இந்த டாஸ்மாக ஹீரோ அப்ப்டீன்னு தன்னிலை விளக்கம் சொல்கிறான் .அப்ப்டி, இப்படி உண்மையை உணரும் ஊர் மக்கள் அவனது தலைமையில் தங்கள் ஊருக்கு டாஸ்மாக் வேண்டாம் என்று அங்கிருந்த பெண்கள் போராட, அதே சமயம் டாஸ்மாக்கால் அடிமையான கூட்டம் அதை எதிர்க்க, கூடவே கள்ள பார் நடத்துவோர் முதலில் அதை கலைக்க முயன்று முடியாமல் போக, கூடவே அரசின் அடிமைகளான போலீஸூம் மக்களுக்கு எதிராக செயல்பட்டு போதைக்கு எதிராக குரல் கொடுக்கும் மக்களை அடித்து விரட்டுகிறது . இதையடுத்து நடக்கும் எதிர்பாராத அதிர்ச்சியான நெகிழ்வான சம்பவமும் அதன் விளைவுமே இந்தப் படம் .
முன்னரே குறிப்பிட்டது போல் தமிழகம் முழுக்க மக்கள் தன்னெழுச்சியாக மதுக்கடைகளுக்கு எதிராக போராடி வருகிறார்கள் . ஆனால் இது துவங்குவதற்கு முன்பே, இதன் போக்கையும், நடப்பையும் திரைக்கதையாக்கி அதையும் ஒரு சினிமாவாக வடிமைக்க காரணமான தயாரிப்பாளர் ஜெரினா பேகத்திற்கு தனி பாராட்டுக்கள். கூடவே கால ஓட்டத்திற்கேற்ற சமாச்சரத்தை கதையாக எழுதிய கதை வசனகர்த்தா நிலம் பாராட்டுக்குரியவர். குறிப்பாக விதை நெல்லை விற்றுக் குடித்ததால் குடும்பமே அழியும் அந்த ஃபிளாஷ் பேக் மனம் திடுக்-கிட வைக்கிறது .
இசையமைப்பாளர் வசந்த ரமேஷ் இசையில் பாடல்கள் ஓகே . அதில் ‘தடதட .. ரயிலொன்னு ஓடுது..’ பாடல் கேட்க இனிமையாக இருப்பதுடன் பார்க்கவும் ரம்மியாக இருக்கிறது .
நாயகன் சங்கர் ஜெய் ஆனந்த் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக தேவையான அளவில் நடித்துள்ளார். அதே சமயம் நாயகி ரஹானா குழந்தைத்தனம் மாறாத முகத்தோடு வந்து அவ்வப்போது கிளாமர் என்ற பெயரில் தொபுள் மற்றும் மாராக்கை விலக்கி காட்டுவதை ரசிக்க முடியவில்லை.
ஆனாலும் மெகா பட்ஜெட் என்ற பிரமாண்ட குரலோடு, டாப் ஸ்டார்களை வைத்துபடு மோசமான திரைப்படங்களை வழங்கியபடி இப்படத்திற்கு மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் எழுதுங்கள் என்றும் கெஞ்சும் கோலிவுட்டில் இது போன்ற திரைப்படங்களுக்கு தனி திறப்பு விழா நடத்த தயாரிப்பளர் சங்கம் முன் வர வேண்டும்.
வாழிய பூமிகா இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் ( இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு ஸ்பெஷல் பாராட்டு)