வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினம்!

வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினம்!
ன்றைக்கு  சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் புரட்சி – வேலூர் சிப்பாய் புரட்சி  1806 – ஆம் ஆண்டில் ஜூலை 10-ம் தேதி நடைபெற்றது. இந்த நாள் இந்திய வரலாற்றில் இந்திய சுதந்திரப்போ ராட்ட வீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்ட நாள். இந்த தேசத்தின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்த தலை வர்களையும் வீரர்களையும் இந்த நாடு மறந்துவிட்ட  சூழ்நிலையில்,  இன்றைய இளைஞர்களுக்கும், குழந்தைக ளுக்கும் தேசத்தின் வரலாற்றை எடுத்துச் சொல்லவேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது.  ஆங்கிலேயர்க ளிடம் அடிமைப்பட்ட இந்தியாவில், முதன்முதலாக கிழக்கிந்தியக் கம்பெனியில் இந்திய சிப்பாய்கள் மீரட் நகரில் 1857 மே 10-ம் தேதி செய்த கிளர்ச்சியையும்   ”சிப்பாய் புரட்சி” என்று தான்  வரலாற்று ஆசிரியர்கள் வர்ணிக்கின்றனர். ஆனால்  அதற்கும்  51 ஆண்டுகளுக்கு முன்பே வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய சிப்பாய்கள் புரட்சி நடத்தினர். ஆனால் அதற்கு  ”வேலூர் சிப்பாய் கலகம்” என்றே வரலாற்றில் பதிவு செய்தனர்.  இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து இந்த புரட்சி தான் என்பதை உணர்ந்த தமிழ் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள்,  இந்தப் போராட்டத்தை  ”வேலூர் சிப்பாய் புரட்சி” என்றே அழைக்கவேண்டும் என்று வற்புறுத்தினர்.    
      
வேலூர் சிப்பாய் புரட்சி வெடித்த வரலாறு 
       1805-ம் ஆண்டு, வேலூர் கோட்டையில்  மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த தென்னிந்தியத் துருப்புகள் தான்  பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டனர். அந்த ஆண்டில் தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால், இந்தியப்படை வீரர்கள் யாரும் தங்கள்  சமய அடையாளங்களை அணிவதோ,  தலையில் குடுமி வைத்திருப்பதோ  கூடாது என்றும்,  ஐரோப்பிய ராணுவ உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்ற கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இந்த விதிமுறை மூலம் இந்திய சிப்பாய்கள் ஐரோப்பிய முறையில் தொப்பி அணிய  வேண்டும் என்பதும்   மாட்டுத் தோலால் ஆன பட்டையை அணிய  வேண்டும் என்பதுமான கட்டாயம்   இந்து மற்றும்  முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த 1,500 வீரர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.  அதனால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட முற்பட்டனர். இப்படியாக கிளர்ச்சியில் ஈடுபட முயன்றவர்களுக்கு தலா 600 பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை  இந்திய சிப்பாய்களுக்கு மேலும் கோபத்தை உண்டாக்கின.  வேலூர் கோட்டையில் அப்போது சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தான் மகன்கள் தான் இந்த கிளர்ச்சிக்கு காரணம் என குற்றம் சாட்டி கடுமையான சித்ரவதைகள் தொடர்ந்தன. 
சிப்பாய் புரட்சி நடைபெற்ற இடம்
            இந்நிலையில், ஆத்திரமடைந்த இந்திய சிப்பாய்கள் 1806-ம் ஆண்டு ஜூலை 10 – ஆம் தேதி அதிகாலை உறக்கத்தில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள் பலரைக் கொன்று குவித்தனர். 350 அதிகாரிகளில் 100 பேர் கொல்லப்பட்ட நிலையில், இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய படைகள் சில மணி நேரத்தில் இந்திய சிப்பாய்கள் 350-க்கும் மேற்பட்டோரை கொன்று புரட்சியை அடக்கினர்.  இந்த புரட்சியில் கொல்லப்பட்ட இந்திய வீரர்களை வேலூர் கோட்டைக்குள் இருந்த கிணறு ஒன்றில் வீசி அக்கிணற்றை மூடிவிட்டதாக  சொல்லப்படுகிறது. ஆனால் இந்த புரட்சியினால் கொல்லப்பட்ட  ஆங்கிலேய அதிகாரிகளின் உடல்கள் மீட்கப்பட்டு, கோட்டையின் எதிரே அடக்கம் செய்யப்பட்டு கல்லறைகள் எழுப்பப்பட்டன. இன்றைக்கும் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகளின் பெயர்கள் தாங்கிய கல்லறைகளை பொதுமக்கள் காண முடியும்.            
இந்த சிப்பாய் புரட்சியில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக வேலூர் மக்கான் பகுதியில் நினைவுத் தூண் ஒன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியால்  நிறுவப்பட்டது. 2006-ம் ஆண்டில் சிப்பாய் புரட்சியின் இரு நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில், வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு அஞ்சல் தலையையும் அன்றைய முதல்வர் கருணாநிதியால் வெளியிடப்பட்டது. அப்பேர் பட்ட  வேலூர் சிப்பாய் புரட்சி தினமான இன்று ( ஜூலை 10 ) புரட்சியின் மூலம் தேசத்தின் விடுதலை வேட்கையை – சுதந்திரப்போராட்டத்தை  தங்களின் இன்னுயிர் தந்து துவக்கி வைத்த நமது வீரர்களின் நினைவைப் போற்றுவோம்.
error: Content is protected !!