மும்பை சொகுசு கப்பலில் போதைப் பார்ட்டி: பாலிவுட் பிரபலங்கள் கைது!

மும்பை சொகுசு கப்பலில் போதைப் பார்ட்டி: பாலிவுட் பிரபலங்கள் கைது!

போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களை தடுக்க, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட போதைப்பொருள் வைத்திருந்ததாக, அண்மையில் பிரபல பாலிவுட் நடிகரின் பெண் தோழியின் சகோதரரான அஜிசிலாஸ் டெமெட்ரியேட்ஸ் கைது செய்யப்பட்ட நிலையில் .ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட பல செல்வந்தர்களின் மகன்கள் பலர் இன்று நடுக்கடலில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மும்பையில் நடுக்கடலில் நேற்று நள்ளிரவில் ஒரு கப்பலில் சிறப்பு விருந்துக்கு சிலர் ஏற்பாடு செய்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கோடீஸ்வரர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள், திரையுலக பிரபலங்கள், மாடலிங் உலகை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் இடம் பெற்றிருந்தனர். அங்கு போதைப் பொருட்கள் பயன் படுத்த போவதாகவும் தகவல் கிடைத்த நிலையில் . 80 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தி, சக பயணிகள் போல் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அந்த கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதே கப்பலில் பிரபல பாலிவுட் நடிகர்களின் குழந்தைகளும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கொண்டாட்டத்தின் போது, போதைப்பொருளும் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அதிரடி சோதனையை தொடங்கிய அதிகாரிகள், சுமார் 7 மணி நேர தேடுதலுக்கு பின், டெல்லி மற்றும் அரியானாவை சேர்ந்த இரு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஷாருக்கானின் மகனிடமும் விசாரணை நடைபெற்று வந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட பல செல்வந்தர்களின் மகன்கள். கைது செய்யப்பட்டு மும்பையில் வைத்து விசாரிக்கப்படுகிறார்கள்.

கடந்தாண்டு, இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு பின், சக இந்தி நடிகர்களிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக பிரபல நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரதா கப்பூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!