சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் சிக்கலான சூழ்நிலை!?

சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் சிக்கலான சூழ்நிலை!?

இப்போது வட இந்தியர்கள் பற்றிய விவாதம் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது… பான்பராக் வாயர் கள், படிக்காத அறிவுகெட்டவர்கள்.. அங்கே ஓட்டு போட்டுவிட்டு இங்கே பானிபூரி விற்க வந்து விடுகிறார்கள், மதவெறியர்கள் என்றெல்லாம் பல பதிவுகளை காண முடிகிறது… அவை ஒருபக்கம் இருக்கட்டும்.. முதலில் நம்மை பற்றிய சுய பரிசோதனையில் இருந்து தொடங்குவோம்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது… இதை நாம் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்திருப்போம்…ஒரு பக்கம் வேலை இல்லா திண்டாட்டம்.. இன்னொரு பக்கம் வேலைக்கு சரியான ஆள் கிடைக்கவில்லை . பெரிய முதலீடுகளில் தொடங்கப் பட்ட பல தொழில் நிறுவனங்கள் ஆரம்பத்த வேகத்தில் மூடப்படுகின்றன. இதற்கு பின்னணனியில் என்ன காரணங்கள் இருக்க முடியும்?

1. மது..

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இலைமறை காய்மறையாக இருந்த மதுப்பழக்கம் இப்போது காபி, டீ போல சாதாரணமான ஒன்றாகி விட்டது… தினமும் மாலை ஆகிவிட்டால் பாட்டிலை தொடாமல் இருக்க முடியாது என்ற நிலை. உலகிலேயே திறன் வாய்ந்த பணியாளர்கள் இருந்த தமிழகத்தில் இன்று குடிகார்ர்கள் நிறைந்து , உற்பத்தி திறன் (productivity) மிகவும் குறைந்து விட்டது… குடி நோயாளிகளால் எந்த வேலையையும் நேர்த்தியாக செய்ய முடிவதில்லை.. குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் , கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோரால் சராசரி 8 மணிநேர பணியை கூட செய்ய முடிவதில்லை… அதிகம் போனால் 4 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.. அதற்கு ₹1000 கூலி கேட்கின்றனர்… வீட்டுக்கு ₹500, இருவேளை மது , சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு ₹500 என்று…!

2.மின்வெட்டு

2009-11 காலகட்டத்தில் நிலவிய அபரிமிதமான மின்வெட்டினால் பல சிறு,குறு தொழில்கள் முற்றிலும் நசிந்து அவர்களில் பலர் வெளி மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்தனர். சிலர் வேறு வேலைகளுக்கு சொற்ப சம்பளத்திற்கு சென்றனர். மின்சாரம் சீரடைந்த பின்னரும் தொழில் தொடங்க பயந்து பணிக்கு செல்வதே பாதுகாப்பானது என்று இருப்பவர்களும் உண்டு.

3.நூறு நாள் வேலை.திட்டம். 

இது விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதாரம் இல்லாத மாவட்டங்களுக்கு அவசியம் தேவை… ஆனால் தமிழகத்தில் பெரும்பகுதி மாவட்டங்கள் ஓரளவு வளர்ந்தவை.. இங்கு இத்திட்டத்தை முறையான திட்டமிடல் இன்றி செயல்படுத்தியதால் காலை 10 மணிக்கு போய் விட்டு 2 மணிக்கு வந்துவிடலாம், வீட்டுக்கு தேவையான விறகுகளை வெட்டிக் கொள்ளலாம்.. வேறு எந்த வேலையும் இல்லை.. ₹150 அக்கவுண்டுக்கு வந்துவிடும் என்ற நிலையால் சிறிய டீக்கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அடிநிலை உதவியாளர் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தடுமாறும் நிலை ஏற்பட்டது…

4. இலவசங்கள்

அரசு தரும் இலவச பொருட்களும், ஊரக வேலைவாய்ப்பு திட்டமும் மக்களை சும்மா இருந்தால் காசு கிடைக்க வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. இத்தகைய காரணங்களால் தமிழகம் ஆபத்தான நிலையை நோக்கி பயணிக்கிறது.

சமீபத்தில் தொழில் தொடங்கி நட்டமடைந்து தொழிலை விட்டவர்களிடம் விசாரித்து பாருங்கள்.. 10ல் 8 பேர் ஊழியர் மற்றும் சம்பள பிரச்சினைகளால் தொழில் நட்டமடைந்த்தாக சொல்லுவார்கள்..

தொழில் நடத்தியே ஆகவேண்டிய கட்டாயமுள்ளோர், வேறு வழியின்றி ஓரளவு குறைவான சம்பளத்தில் (தமிழ்நாட்டவரை ஒப்பிடுகையில்) கிடைக்கும் வட நாட்டவரை அழைத்து வந்து இங்கே வேலைக்கு வைத்து கொள்கின்றனர். ஓட்டல் முதல் கட்டுமான துறை வரை இதுதான் நடக்கிறது.

நம்மவர்கள் பெரும்பாலும் அடிக்கடி லீவு போடும் பழக்கமுடையவர்கள். அவர்கள் அப்படி இல்லை. நாம் செய்யும் வேலையை விட 2 மடங்கு அதிகம் சம்பளத்திற்கு செய்கிறார்.. தங்க வீடு, சாப்பாடு கொடுத்துவிட்டால் போதுமானது.. வருடத்திற்கு ஒருமுறை ஒருமாதம் லீவு கொடுத்தால் போதும். இதுதான் கொத்தனார், ஆசாரி வேலைகளுக்கும்… நம் ஆட்கள் கேலி செய்வதை போல அவர்கள் பானிபூரி மட்டுமே விற்க இங்கே வரவில்லை.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு மக்கள் மனநிலையில் ஆபத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது… வேலையே செய்யக்கூடாது, சும்மாவே எல்லாம் கிடைக்க வேண்டும், சும்மாவே சுகபோக வாழ்வு பெற வேண்டும், தினசரி குடிக்க வேண்டும் என்றெல்லாம் மாற்றங்கள்… இவற்றை பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அரசுகளே சாராயத்தை விற்று லாபத்தை தேடுவதுதான் உச்சபட்ச கொடுமை…

கற்றோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் , இன்னும் காவிகள், கருப்புகள் எல்லோரும் இது குறித்து சிந்தித்து இந்த சமூக மனநிலையை பிடித்துள்ள நோயை மாற்ற வழி தேடினால் மட்டுமே தமிழினம் தப்பிப் பிழைக்கும்…

பரமேஸ்வரன் சிவன்

error: Content is protected !!