March 25, 2023

சேலம் மாடர்ன் தியேட்டர் முன்பு செல்பி எடுத்துக் கொண்ட முதல்வர்!

திருச்செங்கோடு இராமலிங்கம் சுந்தரம் என்னும் T.R,சுந்தரம் தனியொருவரின் பெருங் கனவுதான் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ். படப்பிடிப்பு தளம், பாடல் பதிவு செய்வதற்கான அறை, கூடம், திரைப்படத்தைப் போட்டுப் பார்க்க ஒரு அரங்கம் என அனைத்து வசதிகளுடனும், 1935 இல் “மாடர்ன் தியேட்டர்ஸ்” நிறுவனம் உருவாச்சு..!

தமிழ்த்திரையுலகில் பல பிரபலங்களை உருவாக்கிய பழம்பெருமை வாய்ந்த சேலம் மார்டன் தியேட்டரில் எம்.ஜி.ஆர் கருணாநிதி மற்றும் V.N.ஜானகி உள்ளிட்ட முன்னால் முதல்வர்கள் நடித்துள்ளனர்.இந்த தியேட்டரில் பணியாற்றியுள்ளார். கண்ணதாசன், மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்றோர் மாடர்ன் தியேட்டருக்கு பாடல் எழுதி உள்ளனர்..!

9 மொழிகளில் 118 திரைப்படங்களைத் தயாரித்த பெருமை மாடர்ன் தியேட்டருக்கு உண்டு. 1936-ல் நேருவும், வல்லபாய் படேலும் மாடர்ன் தியேட்டருக்கு சென்று படப்பிடிப்பைக் கண்டு களிச்சிருக்காய்ங்க,,!

ஒரு படத்தின் படப்பிடிப்பு குறிப்பிட்ட தேதியில் தொடங்கி, குறிப்பிட்ட தேதியில் முடியவேண்டும் என்பதில் T.R.சுந்தரம் கண்டிப்பாக இருந்தார்..!

இந்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் சுமார் 250 தொழிலாளர்கள் பரமெனண்டாக வேலை செய்தார்கள்.

சுந்தரம் தமது நிறுவனத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல் படுத்தினார்.

நடிகைகள் உள்ள பகுதிக்கு, நடிகர்கள் போகக்கூடாது. கதை வசனம் முழுமையாகத் தயாரான பிறகுதான், நடிகர் நடிகைகள் யார் என்பது முடிவாகும். நன்றாக ஒத்திகை பார்த்த பிறகுதான் படப்பிடிப்பு தொடங்கும்.இங்கு நடிக்க வந்த நடிகர்கள் கூட ஒரு தொழிலாளர்களைப் போலச் சரியான நேரத்துக்கு வருவது, கட்டுப்பாட்டோடு பணியாற்றுவது, வீண் வம்பு, விவகாரம் இவற்றில் ஈடுபடாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது என்று இருந்தார்கள்.

1951-இல் சர்வாதிகாரி,1952-ல் வளையாபதி, 1960-இல் பாக்தாத் திருடன், போன்ற பல வெற்றிப் படங்களை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினர் எடுத்தனர்.இந்நிறுவனம் எடுத்த முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும் ஆகும்…!ஜெய்சங்கரை வைத்துப் பல 007 மாதிரியான துப்பறியும் படங்களையும் T.R,சுந்தரம் எடுத்திருக்கிறார். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த மொத்த படங்களின் பட்டியல் அந்த நிறுவனத்தின் வாயிலில் பெரிய விளம்பரப் பலகையில் எழுதி வைத்திருந்தார்கள்…!

இந்த நிறுவனத்தின் தயாரிப்பு அரங்கில் 1982ஆம் ஆண்டுவரை 150க்கும் மேலான தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சிங்களம் மற்றும் ஆங்கிலத்திலும் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தமிழ்த் திரைப்படங்களே..!

1963ல் சுந்தரம் மறைந்தார். இன்று மாடர்ன் தியேட்டர்ஸ், சுந்தரம் கார்டன்ஸ் என்ற குடியிருப்புப் பகுதியாக மாற்றம் பெற்றுள்ளது. நுழைவு வாயில் பகுதி மட்டுமே மிஞ்சியிருக்கிறது.,,!

சேலம் போன முதல்வர் ச்டாலின் அந்த நுழைவாயில் முன்னே நின்று செல்ஃபீ எடுத்துக் கொண்ட சேதி வந்த நிலையில் நினைவுக்கு வந்த சேதிகளிவை!

நிலவளம் ரெங்கராஜன்