பெற்ற மகளை கொலை செய்து ஃபேஸ்புக் லைவில் ஒளிபரப்பிய கொடூர தந்தை!

பெற்ற மகளை கொலை செய்து ஃபேஸ்புக் லைவில் ஒளிபரப்பிய கொடூர தந்தை!

ஃபேஸ் புக்கில் லைவ் வீடியோ செய்யும் வசதியை சிலர் மிகத் தவறாக பயன் படுத்தும் போக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. அண்மையில் ஸ்விடனில் ஒரு பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோ லைவாக வெளியிடப்பட்டது, இது தொடர்பாக விசாரணை செய்த அந்நாட்டு நீதிமன்றம் நேற்று முன்தினம் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதித்தது. இந்நிலையில் தாய்லாந்தில் இருந்து மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோவானது வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது..

688e39ce-2a48-11e7-acff-d77f13c4971d_1280x720_154756

அதாவது தாய்லாந்து நாட்டை சேர்ந்த இளம் தந்தை ஒருவன் தன்னுடைய 11 வயது மகளை தூக்கில் போட்டு கொலை செய்து உள்ளான், அதனைதான் வீடியோவாக பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ளான்.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த 21 வயது இளைஞர் வுட்டிசன் வோங்டாலே இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளான். வுட்டிசன் வோங்டாலேவிற்கும், திரிராத்னா என்ற பெண்ணிற்கும் திருமணம் ஆகிய பெண் குழந்தை பிறந்து உள்ளது.குழந்தை பிறந்த பின்னர் திரிராத்னாவின் முன்னாள் கணவனுக்கு பிறந்த குழந்தையை வுட்டிசன் தொடர்ந்து தாக்கி உள்ளார், இதனால் கோபம் அடைந்த திரிராத்னா வீட்டைவிட்டு சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றதிலிருந்து வுட்டிசன் கடும் மன உளைச்சலில் இருந்து உள்ளார்.

இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் உள்ள தாய்லாந்தின் முக்கிய சுற்றுலாத்தளமான புக்கெட் தீவிற்கு தனது மகளுடன் சென்ற வுட்டிசன் சென்று ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளார். 11 மாத பச்சிளம் குழந்தை என்று கூட பார்க்காமல், தனது மகளை தூக்கிட்டு கொன்று உள்ளான்.

இதுமட்டுமல்லாமல் இந்த கொடூர செயலை இரு வீடியோவாக பேஸ்புக் லைவ் மூலமாக ஒளிபரப்பு செய்து உள்ளான். இந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த வுட்டிசனின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். சுமார் 24 மணி நேரங்கள் வீடியோவானது பேஸ்புக்கில் ஒளிபரப்பு ஆகி கொண்டே இருந்து உள்ளது. போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்த போது வுட்டிசனும் தற்கொலை செய்துக் கொண்டான் என்பது தெரியவந்து உள்ளது.

error: Content is protected !!