தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க முடிவு ;வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது!

தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க முடிவு ;வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது!

கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொது ஊரடங்கால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு கட்டுக்குள் வந்ததும் பள்ளிகளில் ரிசல்ட் அறிவிக்கப்பட்டு, மேல்நிலை வகுப்பு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. தற்போது ஆனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறுகின்றன.

நடப்பு கல்வி ஆண்டிற்கு பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

* 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் பாடம் எடுக்க வேண்டும்.

* மாணவர்களுக்கு இடையே 6 அடி இடைவெளி வேண்டும்.

* ஆசிரியர்கள் அறை, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

* பள்ளியில் பணியாற்றும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

* அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி மற்றும் கைகழுவ தண்ணீர் உள்ளிட்டவை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

* கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்க கூடாது.

* மாணவர்களுக்கு சத்து மாத்திரை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையானவை வழங்க வேண்டும்.

* கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதியான மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

* பள்ளிகளில் உள்ள மேஜைகள், கேண்டீன், கழிவறைகள், அனைத்து வகுப்பறைகள், நூலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும்.

* பள்ளி வாகனங்களை கிளம்புவதற்கு முன்பாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

* பள்ளியின் கழிவறைக்கு வெளியே, கைக்கழுவுமிடம் உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி வட்டம் போடப்பட்டிருக்க வேண்டும்.

* பள்ளிகளில் விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு, வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு

error: Content is protected !!