சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால், தர்மம் நீதி வென்றுள்ளது!- எடப்பாடி ஹேப்பி!

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால், தர்மம் நீதி வென்றுள்ளது!- எடப்பாடி ஹேப்பி!

திமுக அலுவலக உரிமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டின் 2ஆவது மூத்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தை மூடி சீலிடுவது என்பது சாதாரண விவகாரம் அல்ல. ஒருகட்சியின் இருதரப்பு மோதிக் கொள்கிறார்கள் என்றால் அது சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்னை ஆகும். ஆனால் இந்த விவகாரத்தில்கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாமல் எப்படி அலுவலகத்திற்கு உரிமை கோரமுடியும்? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினார்கள். தொடர்ந்து, “மீண்டும் உரிமையியல் வழக்கு தொடர்ந்து, அலுவலகத்தின் சாவியை மீட்க, ஓபிஎஸ் தரப்பு சட்ட வழிகளை நாடலாம்” எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதை அடுத்து தர்மம், நீதி வென்றுள்ளதை சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பு காட்டுகிறது என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை இபிஎஸ் தரப்பிடம் அளிக்க பிறப்பிக்கப்பட்ட ஐகோர்ட்டின் ஆணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்ட்ல் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், சேலம் மாவட்டம், எடப்பாடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களை ஏமாற்றி விட்டார். அரசு அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. எடப்பாடி சட்டமன்ற தொகுதி சார்பாக முதல்வருக்கு 10 கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது. அவரால் என்ன செய்ய முடியும் என்று பார்க்காலம் சட்டமன்ற உறுப்பினர் நிதியே வழங்கப்படவில்லை. ஏற்காட்டில் பெய்த கனமழையால் எடப்பாடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால், தர்மம் நீதி வென்றுள்ளது என்பது உறுதி ஆகி உள்ளது. புகழேந்தி யார் ? அதிமுகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. மக்கள் சக்தி இல்லாதவர். தகுதியான நபர் அவர் கிடையாது. கவுன்சிலர் தேர்தலில் கூட வாக்கு வாங்கவில்லை. ஊடகங்கள் தான் அவரை பெரிது படுத்துகின்றன என்றார் எடப்பாடி பழனிசாமி.

முன்னதாக, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் உதவிகளை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினார்

 

error: Content is protected !!