சவுத் இந்தியன் வங்கியில் புரொபேஷனரி லீகல் ஆபீசர் ஜாப் ரெடி!
திருச்சூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் சவுத் இந்தியன் வங்கி முக்கியமான தொரு வங்கியாகும். இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. சவுத் இந்தியன் வங்கியில் புரொபேஷனரி லீகல் ஆபிசர் பிரிவில் தற்சமயம் காலியாக உள்ள 12 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு: விண்ணப்பதாரர் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 1.7.1991க்கு பின்னரும், 30.6.2000க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: பிளஸ்2 படிப்பிற்குப் பின்னர் எல்.எல்.பி., படிப்பை முழு நேரப் படிப்பாகப் படித்து குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம்: பார் கவுன்சில் பணியாற்றியவர்களுக்கும், இதர நிதி நிறுவனங்கள் அல்லது வங்கியில் ஏற்கனவே லீகல் ஆபிசராகப் பணியாற்றியவர்களுக்கும் முன்னுரிமை உண்டு.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.800/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். சலுகைகள் பற்றி அறிய இணையதளத்தைப் பார்க்கவும்.
தேர்ச்சி முறை: ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.
புரொபேஷன் காலம்: இரண்டு வருட காலத்திற்கு புரொபேஷன் அடிப்படையில் பணியாற்ற வேண்டியிருக்கும்.
விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள் : 2019 ஜூலை 28.
விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு