கோவா-வில் ஓய்வெடுக்கச் சென்றார் சோனியா!

கோவா-வில் ஓய்வெடுக்கச் சென்றார் சோனியா!

சோனியா காந்தி ஆஸ்துமா பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வருவதால் தற்போது டெல்லியில் தனது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அண்மை காலமாக டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கோவா சென்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

டெல்லியிலிருந்து வெளியேறும் சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் அடிக்கடி அமெரிக்கா சென்று வந்தார். அத்துடன் உடல்நலனை கருத்தில் கொண்டு அவர் கடந்த 2017-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து பிரதமர் தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து 2019-ல் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவிலிருந்து விலகினார். இதையடுத்து மீண்டும் தற்காலிக தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று கொண்டார். இருப்பினும் தொடர்ந்து அவரது உடல்நலத்தில் பல சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டால் சோனியா காந்தியை டெல்லியில் இருக்கவேண்டாம் என மருத்துவர்கள் அறியவுறுத்தி இருந்தனர். மேலும் வெப்பமயமான பகுதியில் சென்று சில நாட்கள் தங்கும்படி பரிந்துரை செய்திருந்தனர்.

அதனை ஏற்று, கோவா அல்லது சென்னைக்கு ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தியுடன் வர வாய்ப்புள்ளதாக செய்தியாளர்கள் தெரிவித்திருந்த நிலையில், சோனியா காந்தி தற்போது கோவா சென்றுள்ளார். அங்கேயே சில நாட்கள் தங்கி ஓய்வெடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Related Posts

error: Content is protected !!