சுனந்தா மர்ம மரணம்: சசி தரூர் மீதான வழக்கு தள்ளுபடி!
சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் இருந்து சசிதரூர் எம்.பி விடுவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் எம்.பியாக இருப்பவர் சசி தரூர். இவர் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014, ஜனவரி 17-ஆம் தேதி தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் அறையில் மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சுனந்தா புஷ்கரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அவரது கணவா் சசி தரூா் மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு மீதான விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று வந்தது. விசாரித்த நீதிபதி கீதாஞ்சலி கோயல், வழக்கில் இருந்து சசிதரூரை விடுத்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை கேட்டதும் நீதிபதிக்கு சசிதரூர் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் கடந்த ஏழரை வருடமாக தன்னை போலீசார் துன்புறுத்தி வந்ததாகவும் இப்போது அதில் இருந்து விடுதலை கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.