பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர் ஆண்மை நீக்கம் – தாயலாந்து முடிவு!

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர் ஆண்மை நீக்கம் – தாயலாந்து முடிவு!

ர்வதேச அளவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வளர்ந்த நாடுகளிலும் பெண்கள் மீதான சீண்டல்கள் அதிகளவில் உள்ளன. இதனால் தண்டனையை கடுமையாக்க வேண்டும் என குரல்கள் ஒலித்து வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யா, அமெரிக்கா, தென்கொரியா நாடுகளில் உள்ள சில மாநிலங்களில் அமலில் உள்ள தண்டனை முறையை தாய்லாந்து கையில் எடுத்துள்ளது. அதாவது, பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படுவதே இந்த அந்த முறையாகும்.

இதற்காக இயற்றப்பட்ட மசோதாவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. தாய்லாந்து பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், அங்கு பாலியல் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

கடந்த 2013-2020 ஆண்டுகளுக்கு இடையில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 16,413 பாலியல் குற்றவாளிகளில், 4,848 பேர் மீண்டும் பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே தான் தாய்லாந்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தாய்பிபிஎஸ் வோர்ல்டு ஊடகத்தின் அறிக்கையின்படி, இந்த மசோதாவின் கீழ் மனநல நிபுணர், உள் மருத்துவ நிபுணரின் ஒப்புதலுடனும், பாலியல் குற்றவாளியின் ஒப்புதலுடனும் மட்டுமே மருந்து பரிந்துரைக்கப்பட்ட வேண்டும். மீண்டும் குற்றம் செய்யும் அபாயத்தில் உள்ள சில பாலியல் குற்றவாளிகளுக்கு, டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கும் ஊசிகளைப் பெறுவதற்கான விருப்பம் வழங்கப்படலாம்.

குறுகிய சிறைவாசத்திற்கு ஈடாக, அவர்கள் இரண்டு மருத்துவர்களின் ஒப்புதலை பெற்றிருந்தால் இந்த தண்டனை அளிக்கப்படலாம். குற்றவாளிகள் தண்டனையை அனுபவித்த பிறகு அல்லது மறுவாழ்வில் இருப்பவர்களுக்கும் இந்த நடவடிக்கை பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மசோதாவில் குற்றவாளிகள் 10 ஆண்டுகள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும், மின்னணு கண்காணிப்பு வளையல்களை அவர்கள் அணிய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!