அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு: 10 மாணவர்கள் பலி – பலர் படுகாயம்!

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு: 10 மாணவர்கள் பலி – பலர் படுகாயம்!

துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு பேர் போன அமெரிக்காவில் இப்போதெல்லாம் அடிக்கடி பள்ளிக்கூடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களில் நடந்த 3–வது சம்பவம் இதுவாகும். கடந்த பிப்ரவரி மாதம், புளோரிடாவில் ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலியானார்கள்.

இதனிடையே அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் டெக்சாஸ் நகரில் சான்டா பே உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு நேற்று பள்ளி அலுவல்கள் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு மர்ம நபர் உள்ளே நுழைந்தான். தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இந்த சம்பவத்தில், 10 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும் பாலானோர் மாணவர்கள் ஆவர். மேலும் பலர் காயம் அடைந்தனர். ஒரு போலீஸ் அதிகாரியும் சுடப்பட்டதாக தெரிகிறது. காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவன், வழக்கம் போல் பள்ளி மாணவன் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அவனை போலீசார் பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதுகுறித்து போலீஸார் தரப்பில், ‘‘டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகருக்கு அருகே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது  சாண்டா ஃபே ஹை ஸ்கூல் பள்ளி. இப்பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த மாணவர் ஒருவர் வகுப்பு மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பள்ளி அலாரம் ஒலி எழும்பி பள்ளியின் பிற மாணவர்களை எச்சரிக்கை செய்ததைத் தொடர்ந்து பல மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 17 வயதான மாணவர் டிமிட்ரியஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ’கொலை செய்ய பிறந்தவன்’ என்ற வாசகம் அடங்கிய டீ ஷர்ட்டை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.

துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

error: Content is protected !!