துணை நடிகரானார் சுப்ரீம்ஸ்டார் சரத்குமார்!

துணை நடிகரானார் சுப்ரீம்ஸ்டார் சரத்குமார்!

தமிழ் திரையான் கோலிவுட்டில் இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்து வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடித்த படங்களும், இசையமைத்த படங்களும் வணிக ரீதியாக நன்றாக இருக்கிறதுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக இவர் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே வியாபாரமும் முடிந்துவிடும் வழக்கம் உள்ளது.

sarath aug 10

இந்நிலையில் ஜி. வி. பிராகஷ் நடிக்கும் புது படம் ஒன்றில் காஞ்சனா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஸ்ரீ கிரின் புரோடக்ஷன்ஸ் சார்பாக M.S.சரவணன் தயாரிப்பில்  சண்முகம் முத்துசுவாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் இரு வேறு தோற்றத்தில் நடிக்கும் நடிகர் சரத்குமார் இத்திரைப்படத்திற்காக முதன்முறையாக முறையே வாள் சண்டை பயற்சி மேற்கொண்டுவருகிறார்.

ஆனாலும் ஜி.வி.பிரகாஷ் குமார்- தான் கதாநாயகனாகவும் மராத்திய நடிகை வைபவி ஷண்டில்யா கதாநாயகியாகவும் நடிக்க, நடிகர் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் தம்பி ராமையா, ரோபோ சங்கர், அருண்ராஜா காமராஜ், RJ ப்ளேட் சங்கர், RJ மிர்ச்சி விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

இயக்கம் – சண்முகம் முத்துசாமி
தயாரிப்பு – M.S.சரவணன்
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு – PK வர்மா
படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன்
சண்டைபயிற்சி – திலிப் சுப்பராயன்
நடனம் – பாபா பாஸ்கர், ஷெரிப்
மக்கள் தொடர்பு – நிகில்
தயாரிப்பு நிர்வாகம் – M.செந்தில்
நிர்வாக தயாரிப்பு – M.சுரேஷ் ராஜா, அருண் புருஷோத்தமன், T.ரகுநாதன்

error: Content is protected !!