சாம்சங் துணைத் தலைவர் லீ ஜே யாங் -கிற்கு 5 ஆண்டு ஜெயில்!

சாம்சங் துணைத் தலைவர்  லீ ஜே யாங் -கிற்கு 5 ஆண்டு ஜெயில்!

தென் கொரிய அதிபர் பார்க் கியுன் ஹையின் நெருங்கிய தோழி, சோய் சூன் சில். இவர் அதிபரிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி தனது தொண்டு நிறுவனங்களுக்கு தொழில் நிறுவனங்க ளிடம் இருந்து பெரும்தொகைகளை நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அதிபரின் தொடர்பும் சந்தேகிக்கப்பட்டது. இதன் காரணமாக பார்க் கியூன் ஹே, 6 மாத காலத்துக்கு இடை நீக்கம் செய்யப்பட்டார். பார்க் கியூன் ஹே நிரந்தரமாக பதவியை இழப்பதா? அல்லது அதிபர் பதவியில் தொடருவதா? என்பது குறித்த விசாரணையை அந்த நாட்டின் அரசியல் சாசன நீதி மன்றம் விசாரணை நடத்தி வந்தது.

இதற்கிடையே, கடந்த 2015-ம் ஆண்டு சாம்சங் குழுமத்தின் 2 நிறுவனங்களை ஒன்றிணைத்தபோது, அந்த நடவடிக்கையில் தேசிய ஓய்வூதிய நிதியத்தின் ஆதரவை தருவதற்கு அதிக அளவில் பணம் கைமாறியதாக கூறப்படுகிறது. அப்போது சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜே ஒய் லீயை தங்களது அலுவலகத்துக்கு வரவழைத்து, அந்த நாட்டின் அரசு வக்கீல்கள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை தொடர்ந்து 22 மணி நேரம் நடைபெற்றது. அதில் தென் கொரிய அதிபர் பார்க் கியுன் ஹையின் நெருங்கிய தோழி, சோய் சூன் சில். இவர் அதிபரிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி தனது தொண்டு நிறுவனங்களுக்கு தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெரும் தொகைகளை நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அதிபரின் தொடர்பும் சந்தேகிக்கப்பட்டு இதன் காரணமாக பார்க் கியூன் ஹே, 6 மாத காலத்துக்கு இடை நீக்கம் செய்யப்பட்டார். அவரது அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன.

அவர் நிரந்தரமாக பதவியை இழப்பதா? அல்லது அதிபர் பதவியில் தொடருவதா? என்பது குறித்த விசாரணையை அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு விசாரித்து வந்தது. இதற்கிடையே, கடந்த 2015-ம் ஆண்டு சாம்சங் குழுமத்தின் 2 நிறுவனங்களை ஒன்றிணைத்தபோது, அந்த நடவடிக்கையில் தேசிய ஓய்வூதிய நிதியத்தின் ஆதரவை தருவதற்கு பெருமளவு பணம் கைமாறியதாக கூறப்படுகிறது.

அதையொட்டி சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜே ஒய் லீயை தங்களது அலுவலகத்துக்கு வரவழைத்து, அந்த நாட்டின் அரசு வக்கீல்கள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை தொடர்ந்து 22 மணி நேரம் நடந்தது.இந்த விசாரணையின்போது 5 டாலர் (சுமார் ரூ.340) விலையிலான மதிய உணவு பொட்டலம் மட்டும் அவருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு இரவில் உறங்கவும் நேரம் ஒதுக்கித் தரப்படவில்லை. அரசு வக்கீல்களும் தூங்கவில்லை. மறுநாள் காலைதான் விசாரணை முடிவுக்கு வந்தது.

இந்த விசாரணையின்போது லீ அளித்த வாக்குமூலத்தை இதர அரசு ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்த அரசு அதிகாரிகள் அவரை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர். அவருக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன் படி ஜே ஒய் லீ-க்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Posts

error: Content is protected !!