ஸ்டேட் பேங்க்-கில் ஸ்பெஷல் ஆபீசர் ஜாப் வேணுமா?

ஸ்டேட் பேங்க்-கில் ஸ்பெஷல் ஆபீசர் ஜாப் வேணுமா?

இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா திகழ்கிறது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இவ்வங்கிக்கு நாடு முழுவதும் 24 ஆயிரம் கிளைகள், 59 ஆயிரம் ஏ.டி.எம்.,கள், 2.78 லட்சம் ஊழியர்கள், 50 வெளிநாட்டு கிளைகள் என இந்தியாவின் முன்னோடி வங்கியாக திகழ்கிறது. இங்கு காலியாக உள்ள 41 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்:
துணை மேலாளர் (சட்டம்) பிரிவில் 41 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது தகுதி :
2017 செப்., 1 அடிப்படையில் 25 – 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீட்டு பிரிவினருக்குரிய வயது சலுகை உள்ளது. கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கூடுதலாக பார்கவுன்சிலில் பதிவு செய்த பின், குறைந்தது 4 ஆண்டுகள் வங்கிகள் அல்லது நிதிநிறுவனங்களில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
இப்பதவிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணபிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் 600 ரூபாய். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு 100 ரூபாய்.

தேர்ச்சி முறை :
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

கடைசி நாள்:
2017 அக்., 6

விபரங்களுக்கு :
ஆந்தை வேலை வாய்ப்பு

error: Content is protected !!