தமிழ்நாடு போஸ்டல் டிப்பார்ட்மெண்டில் ஜாப் ரெடி!

தமிழ்நாடு போஸ்டல் டிப்பார்ட்மெண்டில் ஜாப் ரெடி!

தமிழக தபால் துறையில் எம்.டி.எஸ்., பிரிவில் காலியாக உள்ள 285 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



காலியிடங்கள்
: 2018ம் ஆண்டில் 120 (சென்னை மண்டலம் 31, மத்திய மண்டலம் 18, தெற்கு மண்டலம் 18, மேற்கு மண்டலம் 13, மற்றவை 40) மற்றும் 2019ம் ஆண்டில் 165 (சென்னை மண்டலம் 41, மத்திய மண்டலம் 33, தெற்கு மண்டலம் 35, மேற்கு மண்டலம் 22, மற்றவை 34) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த 285 காலியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளன.

வயது: எம்.டி.எஸ்., பதவிக்கு 18 -25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி.

தேர்ச்சி முறை: இரண்டு தாள்களைக் கொண்ட எழுத்துத்தேர்வு.

எழுத்துத்தேர்வு தேதி: 15.3.2020

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் தொடர்புடைய தபால் நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும்.

கடைசிநாள்
 :17.2.2020

விபரங்களுக்கு
ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!