ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை!

தொடரும் கொரோனா அலை மற்றும் ஊரடங்கு சூழலில் குறுகிய காலக் கடனுக்கான வட்டி வீதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்ய வேண்டாம் என்று நிதிக் கொள்கைக் குழுவில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து 4 சதவீதமாகவே வட்டி வீதம் தொடரும். எதிர்காலத்தில் தேவைப்பட்டால், பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த வட்டி வீதம் குறைப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் – என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

நம் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் 19 வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக, மாநில அரசுகள் விதித்த கட்டுப்பாடுகளால் உள்நாட்டு வளர்ச்சியில் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.இந்நிலையில் இந்த நடப்பு நிதிஆண்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. மூன்று நாட்கள் நடைபெற்ற ரிசர்வ் வங்கி கொள்கை குழு கூட்டத்திற்கு பின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களிடம், “2021-22ம் நிதியாண்டிற்கான ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளோம். சந்தைகளில் போதுமான பணப்புழக்கம் நிலவும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். மாநில அளவிலான ஊரடங்குகள் சமீபத்திய தேவை நிலைமைகளின் முன்னேற்றத்தைக் குறைத்து பொருளாதார சூழ்நிலை இயல்புநிலைக்கு திரும்புவதை தாமதப்படுத்தும்.

இதனால் குறுகிய கால கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இந்த ஆண்டும் ரெப்போ வட்டி 4 சதவீதமாகவே தொடரும். அதேபோல் ரிவர்ஸ் ரெப்போ வட்டி வகிதமும் 3.35 சதவீதமாகவே இருக்கும்”என்று சக்திகாந்த தாஸ் கூறினார்.

Related Posts

error: Content is protected !!