நாம் கேள்வி பட்டதை விட டெல்டா மக்களுக்கு அதிக பாதிப்பு!- ராகவா லாரன்ஸ் வேதனை

நாம் கேள்வி பட்டதை விட டெல்டா மக்களுக்கு அதிக பாதிப்பு!- ராகவா லாரன்ஸ் வேதனை

கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் குவிகிறது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விஷால், ஆகியோர் இயக்க தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மூலம் பாதிக்கப்பட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் புயலால் வீடு இழந்தவர்கள் 50 பேருக்கு தலா ரூ.1 லட்சம் செலவில் சொந்த வீடுகள் கட்டி கொடுப்பதாக தெரிவித்தார். அத்துடன் ஒரு பாட்டியின் இன்றைய நிலைமையை வீடியோவில் காட்டி இந்த அம்மா-வுக்குதான் முதல் வீடு என்றும் தெரிவித்திருந்த நிலையில் இன்று ‘கஜா புயல் நிவாரணமாக 50 விடுகளை கட்டித் தருவதாக அறிவித்திருந்தேன்.. அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளுக்காக திருவாரூர் குன்னனூருக்கு வந்து பார்த்தேன்…

நாம் சென்னையில் கேள்விப் பட்டது போல் இல்லாமல் ஒரு தெருவில் 50 வீடுகளுக்கு மேல் பாதிக்கப் பட்டிருப்பதை பார்த்து அந்த பகுதி மக்களின் வலியையும் வேதனையையும் உணர்ந்தேன்..நாம் கேள்வி பட்டதை விட அதிக பாதிப்பு டெல்டா மக்களுக்கு…. அந்த பகுதி மக்களை மீட்டெடுக்க நாம் எல்லோரும் ஒன்றினைய வேண்டும்.. அவர்களுக்கு உதவ எல்லோரும் முன் வர வேண்டும் …இது தான் என் தாழ்மையான வேண்டுகோள்.”என்று ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்..

error: Content is protected !!