கிரிப்டோகரன்சி தளமான Qubit தளத்திடமிருந்து 80 மில்லியன் டாலர் திருட்டு!

கிரிப்டோகரன்சி தளமான Qubit தளத்திடமிருந்து 80 மில்லியன் டாலர் திருட்டு!

பிரபல கிரிப்டோகரன்சி தளமான க்யூபிட் (Qubit) தளத்திடமிருந்து 80 மில்லியன் டாலரை ஹேக்கர்கள் திருடியுள்ளனர்.

பரவலாக்கப்பட்ட டிபை நிதி (டிபை (Decentralised Finance) தளமான க்யூபிட் ஃபைனான்ஸ் (Qubit Finance) கிரிப்டோ கரன்சி தளத்திலிருந்து 80 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.600 கோடி) மதிப்புள்ள கிரிப்டோ கரன்சியை ஹேக்கர்கள் திருடிவிட்டனர் என்று தெரிவித்துள்ளது. மேலும், அந்நிறுவனம் இப்போது திருடப்பட்ட கிரிப்டோ கரன்சியைத் திருப்பித் தருமாறு ஹேக்கர்களிடம் கெஞ்சுகிறது.

2022 ஆம் ஆண்டில் திருடப்பட்ட மிகப்பெரிய கிரிப்டோகரன்சி ஹேக் இதுவாகும். க்யூபிட் ஃபைனான்ஸ் ஹேக் செய்ததை ஒப்புக் கொண்டது. க்யூபிட் ஃபைனான்ஸ் குழு நேரடியாக ஹேக்கரிடம் முறையிட்டுள்ளது. அதில், கியூபிட் நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்புகளைக் குறைக்க க்யூபிட் ஃபைனான்ஸ் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளது. க்யூபிட் ஃபைனான்ஸ் குழு தற்போது பாதுகாப்பு மற்றும் நெட்வொர்க் பார்ட்னர்ஸ் உடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

‘DeFi’ என்பது கிரிப்டோ கரன்சிகள் பயன்படுத்தும் பாதுகாப்பான பரவலாக்கப்பட்ட பிளாக்செயின் லெட்ஜர்களை அடிப்படையாகக் கொண்ட, வளர்ந்து வரும் நிதி தொழில்நுட்பமாகும்.

Related Posts

error: Content is protected !!