• Latest
  • Trending
  • All
ஆன்லைன் ரம்மி : புதுச்சேரி வாலிபர் உயிரைப் பறித்தது!

ஆன்லைன் ரம்மி : புதுச்சேரி வாலிபர் உயிரைப் பறித்தது!

4 months ago
ஸ்டார் விஜய்யில்  ஏலே படம் : -28 பிப்ரவரி பிற்பகல் 3 மணிக்கு காண தவறாதீர்!

ஸ்டார் விஜய்யில் ஏலே படம் : -28 பிப்ரவரி பிற்பகல் 3 மணிக்கு காண தவறாதீர்!

12 hours ago
“எடை குறைப்பு & சரும பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் ” ; ஹேமமாலினி மகள் ஈஷா தியோல்!

“எடை குறைப்பு & சரும பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் ” ; ஹேமமாலினி மகள் ஈஷா தியோல்!

12 hours ago
சில்மிஷ சர்ச்சையில்சிக்கிய ஐ ஏ எஸ் ஆபீசர் ராஜேஷ் தாஸ் யார்?அவர் மீதான் புகார் என்ன??

சில்மிஷ சர்ச்சையில்சிக்கிய ஐ ஏ எஸ் ஆபீசர் ராஜேஷ் தாஸ் யார்?அவர் மீதான் புகார் என்ன??

13 hours ago
25-ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கு கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

25-ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கு கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

2 days ago
திஷா ரவிக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமீன்!

திஷா ரவிக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமீன்!

2 days ago
இடைக்கால பட்ஜெட் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த விபரம்!

இடைக்கால பட்ஜெட் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த விபரம்!

2 days ago
ஒரு ராஜா உள்ளே: ஒரு ராஜா வெளியே -சீனிவாஸ் திவாரி!

ஒரு ராஜா உள்ளே: ஒரு ராஜா வெளியே -சீனிவாஸ் திவாரி!

2 days ago
லியாம் நீசனின் ‘தி மார்க்ஸ்மேன்’ -அதிரடி ஆக்‌ஷன் விருந்துக்கு தயாரா?

லியாம் நீசனின் ‘தி மார்க்ஸ்மேன்’ -அதிரடி ஆக்‌ஷன் விருந்துக்கு தயாரா?

2 days ago
உலகின் மிகப்பெரிய மைதானமான மொடேரா கிரிக்கெட் ஸ்டேடியம் திறக்கப் போறாங்கோ!

உலகின் மிகப்பெரிய மைதானமான மொடேரா கிரிக்கெட் ஸ்டேடியம் திறக்கப் போறாங்கோ!

2 days ago
கடல் தமிழகத்தை கொள்ளும் காலம் வந்துவிடும்!- கால நிலை மாற்ற எச்சரிக்கை!

கடல் தமிழகத்தை கொள்ளும் காலம் வந்துவிடும்!- கால நிலை மாற்ற எச்சரிக்கை!

3 days ago
அருண் விஜய் AV 31 திரைப்பட டப்பிங் பணிகள் தொடங்கிடுச்சு!

அருண் விஜய் AV 31 திரைப்பட டப்பிங் பணிகள் தொடங்கிடுச்சு!

3 days ago
வரும் 25 ஆம் தேதி அமமுகவின் பொதுக்குழுக்கூட்டம் !- டிடிவி தினகரன் அறிவிப்பு!

வரும் 25 ஆம் தேதி அமமுகவின் பொதுக்குழுக்கூட்டம் !- டிடிவி தினகரன் அறிவிப்பு!

3 days ago
  • Home
  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • சின்னத்திரை
    • புகைப்படம்
    • டிரைலர்
  • எடிட்டர் சாய்ஸ்
    • அலசல்
    • ஆய்வு முடிவு
    • சர்ச்சை
    • ஆந்தை யார்!
    • சொல்றாங்க
    • டெக்னாலஜி
    • வழிகாட்டி
      • கல்வி
      • வேலை வாய்ப்பு
  • ரவி நாக் பகுதி
  • வணிகம்
    • டூரிஸ்ட் ஏரியா
    • மறக்க முடியுமா
  • டிமி பக்கம்
Thursday, February 25, 2021
  • Login
AanthaiReporter.Com
  • Home
  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • சின்னத்திரை
    • புகைப்படம்
    • டிரைலர்
  • எடிட்டர் சாய்ஸ்
    • அலசல்
    • ஆய்வு முடிவு
    • சர்ச்சை
    • ஆந்தை யார்!
    • சொல்றாங்க
    • டெக்னாலஜி
    • வழிகாட்டி
      • கல்வி
      • வேலை வாய்ப்பு
  • ரவி நாக் பகுதி
  • வணிகம்
    • டூரிஸ்ட் ஏரியா
    • மறக்க முடியுமா
  • டிமி பக்கம்
No Result
View All Result
AanthaiReporter.Com
No Result
View All Result
Home எச்சரிக்கை

ஆன்லைன் ரம்மி : புதுச்சேரி வாலிபர் உயிரைப் பறித்தது!

October 19, 2020
in எச்சரிக்கை
0
527
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அடிமையாகி, பணம், நிம்மதி உள்ளிட்ட அனைத்தையும் இழந்து தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நம்ம மெட்ராஸ் ஐகோர்ட் ஆணையிட்டும் கூட ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காத சூழலில் ஆன்லைனில் ரம்மி விளையாட்டில் பணத்தை அதிக அளவில் இழந்த இளைஞர் ஒருவர், ஆன்லைன் விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என தனது மனைவிக்கு உருக்கமான ஆடியோ பதிவை அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொழுதுபோக்கிற்காக கொண்டுவரப்பட்ட ஆன்லைன் ரம்மி விளையாட்டை, தற்போது பணத்துக்காக விளையாடும் சூதாட்டமாக பல நிறுவனங்கள் மாற்றிவிட்டன. இந்தச் சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்த மத்திய, மாநில அரசுகளிடம் சட்டம் எதுவும் இல்லை. அதனால், இந்தியாவில் எந்த உரிமத்தையும் பெறாமல், நம்முடைய சைபர் இடத்தை வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் பயன்படுத்தி, இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்துகின்றன. ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டில் பல இளைஞர்கள் தங்களது பணத்தை மட்டும் இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் லட்சக்கணக்கில் பணத்தைப் பறிகொடுத்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் மட்டுமே, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட தளங்களால் பணத்தை பறிகொடுத்த பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டங்கள் பல குடும்பங்களை நிர்க்கதிக்கு உள்ளாக்கியுள்ளன.

மக்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தாலும், மத்திய அரசு, இந்த விவகாரத்தில் மவுனம் காக்கிறது. இந்நிலையில், ஆன்லைனில் ரம்மி விளையாட்டில் பணத்தை அதிக அளவில் இழந்த இளைஞர் ஒருவர், ஆன்லைன் விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என தனது மனைவிக்கு உருக்கமான ஆடியோ பதிவை அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கோர்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் சிம்கார்டு விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கால் போதிய வருமானம் இல்லாததால் பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஆன்லைனில் ரம்மி விளையாட ஆரம்பித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான விஜயகுமார் பலரிடம் கடனாகப் பணம் பெற்று தொடர்ந்து ஆன் லைன் ரம்மி விளையாடி தோல்வியடைந்துள்ளார். இதனால் பெரும் கடன் நெருக்கடியில் சிக்கி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டை தடை செய்யுங்கள் என வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த விஜயகுமார், உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக தனது மனைவிக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பிய ஆடியோ பதிவில், தனது தற்கொலைக்கான காரணம் குறித்து விஜயகுமார் உருக்கமாகப் பேசியுள்ளார். அதில் “ என்னை மன்னிச்சிடு மதி. என்னால ஒன்னும் பண்ண முடியல மதி. தூங்காம கண்ணெல்லாம் மங்கலா தெரியுது. உடம்பெல்லாம் போயி வீக் ஆயிடுச்சி மதி. நான் ஒரு ரூபா ரெண்டு ரூபா விடல மதி. கணக்குப் பாத்தா 30 லட்ச ரூபாய்க்கு மேல விட்ருக்கேன். தப்புதான். போதை மாதிரி விளையாடிட்டே இருந்துட்டேன். ஒரு நாளைக்கு ரூ.50,000 ஜெயிச்சாக்கா மத்த மூனு நாள்ல நம்மக்கிட்ட இருந்து ரெண்டு லட்ச ரூபா வெளில போயிடுது.

அது எனக்குப் புரியவே இல்ல. அது புரியாமலே விட்ட காசை புடிச்சிடலாம், இந்த டோர்னமெண்டுல அடிச்சிடலாம், அடுத்த டோர்னமெண்டுல அடிச்சிடலாம்னு பல டோர்னமெண்ட் விளையாடிட்டேன் மதி. கடைசி வரைக்கும் அவனுங்க நம்மள வச்சித்தான் செஞ்சானுங்கன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சி. தெரிஞ்சும் விளையாடினேன். இப்போக்கூட எனக்கு விளையாடனும்னு தோனுது. அந்த அளவுக்கு அதுக்கு அடிக்ட் ஆகியிருக்கேன். எப்படித்தான் நான் அடிக்ட் ஆனேன்னு தெரியல.

நான் உன்னை அந்த அளவுக்கு லவ் பண்ணேன் மதி. பசங்கள பாத்துக்கோ. ரெண்டு அக்கவுண்ட்லயும் கொஞ்சம் கொஞ்சம் காசு இருக்கும். இப்போக்கூட அந்த ஆன்லைன் ரம்மி மேல் ஆப்ல இருந்து 17,000 ரூபாய் உன் அக்கவுண்டுக்குத்தான் ரீடம் பண்ணிருக்கேன். அது திங்கக்கிழமை உனக்கு கிரெடிட் ஆயிடும். இடத்தை வித்துடு. நகையெல்லாம் வித்துட்டு மதுரையில உங்க அம்மா வீட்டுக்குப் போயி செட்டில் ஆயிடு. ஏன்னா எங்க வீட்டுலல்லாம் யாரும் உன்னை அந்தளவுக்கு பாத்துக்க மாட்டாங்க. என்னை மட்டும் மறந்துடாத மதி (உடைந்து அழுகிறார்). ஒன்றரை வருஷத்துல வாழ்க்கை இப்படி மாறிடுச்சி. எப்படி ஓடி ஓடி சம்பாரிச்சேன் தெரியுமா ? டிஸ்ட்ரிபியூஷன்ல அப்படி இருந்தேன் நான்.

இன்னைக்கு அந்த நெட்வொர்க்ல கேவலமா இருக்கேன். என்னால வேலையே செய்ய முடியல. அந்தளவு லட்சக் கணக்குல சம்பாரிச்சேன். ஆனால் இன்னைக்கு என் மூளை வேலை செய்யல. எல்லாமே மங்கிப் போயிடுச்சி. ஒரு காலத்துல இந்தியன் மொபைல் டிஸ்டிரிபியூஷன் பேரு தமிழ்நாட்டுக்கே தெரியும். அந்தளவுக்கு என் பேரை ஃபேமஸ் பண்ணி வெச்சிருந்தேன். ஆனால் இந்த ரம்மில நான் அடிக்ட் ஆனதால என்னால பிசினஸ் பண்ணவே முடியல. பசங்கள ஒழுங்கா பாத்துக்க முடியல. உன்னை என்னால பாத்துக்க முடியல. என்னைவிட்டு எல்லாமே போயிடுச்சி. என்னால என்னை மாத்திக்க முடியல. எனக்கு இதவிட்டா வேற வழியே தெரியல மதி. அந்த ஐடியாவுல (சிம்கார்டு நிறுவனம்) ரெண்டு லட்ச ரூபாய்க்கு மேல இருக்கு. அக்கவுண்ட்ல கொஞ்சம் கேஷ் இருக்கு. அது இல்லாம வீட்ல அந்த மஞ்சப் பையில கொஞ்சம் கேஷ் இருக்கு. பசங்கள பாத்துக்க மதி. இன்சூரன்ஸ், பாரதியார் பேங்கெல்லாம் க்ளோஸ் பண்ணிடு. ஒரு ரூபா, ரெண்டு ரூபாயா இருந்தாலும் எல்லாத்தையும் சுருட்டி ஒரே அமௌண்டா ஆக்கி எடுத்துட்டு உங்க ஊருக்குப் போயி. 5 லட்ச ரூபாய் இருந்தாலும் அத பேங்க்ல போட்டு அதுல வர்ற வட்டியை வாங்கி பசங்கள பாத்துக்க.

பசங்கள என்னை மாதிரி வாழ விடாத மதி. நீ ஏதாவது பண்ணணும் நினைச்சா, இந்த ஆன்லைன்ல நடக்கற விஷயத்த எல்லாம் தடுக்குறதுக்கு யாருகிட்டயாவது சொல்லு. ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் எதுலயாவது போட்டு என் வாழ்க்கை அழிஞ்சி போச்சி, எம்புருஷன் செத்துட்டான்னு போட்டு ஆன்லைன்ல நடக்கற எல்லா கேம்களையும் ஆஃப் பண்ணி விட்டுடு. அது எனக்கு மனத்திருப்தியை அளிக்கும். இன்னைக்கு நான் சாகறதுக்கு முழு காரணமும் அதான். என்னைப் போல பலபேரு அதுல மாட்டிக்கிட்டு இருக்கான். விளையாடிட்டே இருக்கானுங்க. என்ன முடிவுல விளையாடறானுங்கன்னே தெரியல. முடிஞ்ச அளவுக்கு அந்த கம்பெனியை எல்லாம் இழுத்து மூடிடு மதி.

எனக்கு தெய்வம் நீ. என் தெய்வத்தை விட்டு நான் போறேன். பாப்பாவை பாத்துக்க மதி. பாப்பாவை கூட கூட்டிக்கிட்டு போயிலாம்னுதான் பாத்தேன். அந்த காரியத்தை பண்ண தைரியம் இல்ல எனக்கு. அப்பா இல்லாம எம்பொண்ணு எப்படி வாழுவான்னு தெரியல. இந்த ஆவியெல்லாம் உண்மையா இருந்தா உங்க கூடவேதான் இருப்பேன். உங்கள பாத்துக்கிட்டே தான் இருப்பேன். நான் எங்க செத்துக் கெடக்கறேனோ அங்கதான் என் வண்டியும், சின்ன போன், பெரிய போன் ரெண்டுமே என் வண்டிலதான் இருக்கு. சின்ன போனை பிரபு சாருகிட்டக் குடு. அவர் ஈ.சி பண்ணி அதை அமௌண்டா ஆக்கிடுவாரு. என்னை விட்ருங்க சந்தோஷம். எல்லாரும் என்னை முட்டாள், பைத்தியக்காரன்னு என்ன வேணும்னாலும் சொல்லட்டும் மதி. ஆனால் என்னால முடியல.

என் மைண்ட் என்ன விட்டுப் போயிடுச்சி. எனக்காக ஒரே விஷயம் பண்ணு. இந்த ஆன்லைன் கேம் எல்லாத்தையும் தடுக்கற மாதிரி முடிஞ்ச அளவுக்கு எல்லா குருப்லயும் ஷேர் பண்ணி விடு. என்னாலயாவது அது நின்னதா இருக்கட்டுமே. நானே கடைப்சியா இருக்கட்டும். எனக்கு அதாவது சந்தோஷமா இருக்கும். நான் எவ்ளோ அமௌண்ட் விட்டேன்னு நீ தெரிஞ்சுக்க ஆசைப்பட்டா என் ஆந்திரா பேங்க் அக்கவுண்டையும், உன் இந்தியன் பேங்க் அக்கவுண்டையும் எடுத்து நீ செக் பண்ணா உனக்குப் புரியும். வெளிய சொல்ல முடியாத அளவுக்கு அமௌண்ட் அது. அதையெல்லாம் என்னால சம்பாரிக்கவே முடியாது. ஆனால் சம்பாரிச்சி விட்டுட்டேன். பச்சையப்பன்கிட்டன் பத்திரம் மாட்டிக்கிட்டு இருக்கு. அத மூட்டு வித்து கடனை அடைச்சிடு. நீ உன் அம்மாகூட பேச ஆரம்பிச்சிட்டா மாறிடுவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ வாழு. பசங்கள பாத்துக்க. ஐ லவ் யூ மதி” என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.

விஜயகுமார் தற்கொலை நிகழ்வும், அவரது ஆடியோ பதிவும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட தளங்களை முடக்கவேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகிறது.

Tags: gamblingkills selfmoneyPuducherry: Man
Share211Tweet132Share53

Latest

ஸ்டார் விஜய்யில்  ஏலே படம் : -28 பிப்ரவரி பிற்பகல் 3 மணிக்கு காண தவறாதீர்!

ஸ்டார் விஜய்யில் ஏலே படம் : -28 பிப்ரவரி பிற்பகல் 3 மணிக்கு காண தவறாதீர்!

February 24, 2021
“எடை குறைப்பு & சரும பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் ” ; ஹேமமாலினி மகள் ஈஷா தியோல்!

“எடை குறைப்பு & சரும பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் ” ; ஹேமமாலினி மகள் ஈஷா தியோல்!

February 24, 2021
சில்மிஷ சர்ச்சையில்சிக்கிய ஐ ஏ எஸ் ஆபீசர் ராஜேஷ் தாஸ் யார்?அவர் மீதான் புகார் என்ன??

சில்மிஷ சர்ச்சையில்சிக்கிய ஐ ஏ எஸ் ஆபீசர் ராஜேஷ் தாஸ் யார்?அவர் மீதான் புகார் என்ன??

February 25, 2021
25-ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கு கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

25-ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கு கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

February 24, 2021
திஷா ரவிக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமீன்!

திஷா ரவிக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமீன்!

February 24, 2021
இடைக்கால பட்ஜெட் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த விபரம்!

இடைக்கால பட்ஜெட் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த விபரம்!

February 23, 2021
ஒரு ராஜா உள்ளே: ஒரு ராஜா வெளியே -சீனிவாஸ் திவாரி!

ஒரு ராஜா உள்ளே: ஒரு ராஜா வெளியே -சீனிவாஸ் திவாரி!

February 23, 2021
லியாம் நீசனின் ‘தி மார்க்ஸ்மேன்’ -அதிரடி ஆக்‌ஷன் விருந்துக்கு தயாரா?

லியாம் நீசனின் ‘தி மார்க்ஸ்மேன்’ -அதிரடி ஆக்‌ஷன் விருந்துக்கு தயாரா?

February 23, 2021
AanthaiReporter.Com | Tamil Multimedia News Web

Copyright © 2017 JNews.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • சின்னத்திரை
    • புகைப்படம்
    • டிரைலர்
  • எடிட்டர் சாய்ஸ்
    • அலசல்
    • ஆய்வு முடிவு
    • சர்ச்சை
    • ஆந்தை யார்!
    • சொல்றாங்க
    • டெக்னாலஜி
    • வழிகாட்டி
      • கல்வி
      • வேலை வாய்ப்பு
  • ரவி நாக் பகுதி
  • வணிகம்
    • டூரிஸ்ட் ஏரியா
    • மறக்க முடியுமா
  • டிமி பக்கம்

Copyright © 2017 JNews.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In