ஜே.கே. ரித்திஷ் இடத்தை நிரப்ப வந்திருக்கும் ’பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர்!

ஜே.கே. ரித்திஷ் இடத்தை நிரப்ப வந்திருக்கும் ’பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர்!

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வெளியான ‘களவாணி 2’ மூன்றாவது வாரமாக
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியான அனைத்து திரையரங்கங்களிலும் பெரும் வரவேற்பு பெற்ற  இப்படத்தின் வெற்றியை படக்குழு சமீபத்தில் கொண்டாடினார்கள். இந்த நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், செல்லும் இடங்களில் எல்லாம், அவரிம் பேசும் பொது மக்கள், “நீங்க தேர்தலில் நின்றால், எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்” என்று சொல்கிறார்களாம்.

அதிலும் உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவான ‘களவாணி 2’வில் துரை சுதாகர் வில்லன் வேடத்தில் நடித்தாலும், அவரது கதாபாத்திரம் செண்டிமெண்ட் நிறைந்த நேர்மையான மனிதராக சித்தரிக்கப்பட்டிருந்ததால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. ஒரு கட்டத்தில் களவாணி தனம் செய்து தேர்தலில் வெற்றி பெறும் விமல் மீது ரசிகர்கள் கோபப்பட்டாலும், துரை சுதாகர் கதாபாத்திரம் க்ளைமாக்ஸில் பேசும் வசனத்திற்கு ஆரவாரமாக கைதட்டுகிறார்கள்.

இப்படி, வில்லனாக நடித்து மக்கள் மனதில் ஹீரோவாக இடம் பிடித்திருக்கும் துரை சுதாகர், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் திரையரங்கங்களுக்கு சென்ற போது அவரை சூழ்ந்துக் கொண்ட மக்கள், “எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் தலைவரே…” என்றும் கோஷமிடுகிறார்களாம்.

தற்போது, வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடிக்கும் ‘டேனி’ படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்து வரும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், படப்பிடிப்பில் இருந்தாலே அந்த இடத்தில் மக்கள் கூட்டம் கூடிவிட, ஒரே தேர்தல் கோஷங்களாகவே எழுகின்றதாம்.

இனி முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களில் நல்ல நல்ல வேடங்களில் நடித்து நல்ல நடிகர் என்று பெயர் எடுக்க வேண்டும், என்ற எண்ணத்தில் சினிமாவுக்குள் நுழைந்து இருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரை, பொது மக்கள் அரசியல்வாதியாக ஆக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு ‘களவாணி 2’ வில் அவர் நடித்த ஊராட்சி தலைவர் கதாபாத்திரமும், அவரது நடிப்பும், அவர் பேசும் வசனங்களும் மக்களிடம் ரீச் ஆகியிருக்கிறது.

இது குறித்து நம் ரிப்போட்டர் வட்டாரம் சுதாகர் தரப்பில் விசாரித்த போது, ‘கோலிவுட் எனப்படும் தமிழ் சினிமாவை நம்பி வாழ்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து பலருக்கு பலவித உதவிகள் செய்தவர் மறைந்த ஜே. கே. ரித்திஷ். எவருமே எதிர்பார்க்காத சூழலில் காலமாகி விட்ட அவர் இடத்தை நிரப்பவே இந்த’ பப்ளிக் ஸ்டாரு’க்கு ஆசை.. அதற்காக அவர் மாதிரியே எல்லா விஷயங்களிலும் இருப்பீர்களா? என்று கேட்டால் அதற்கு இப்போது பதிலில்லை ..,ஆனால் ரித்திஷ் இந்த இண்டஸ்ட்ரி எப்படி நிமிர வெண்டும் என்று ஆசைப் பட்டார் என்பதை அண்ணன் சுதாகரிடம் பர்சனலாக பகிர்ந்துள்ளார்.. அதை மனதில் கொண்டு இந்த இண்டஸ்ட்ரி மூலம் சம்பாதிக்க நினைக்காமல் இந்த இண்டஸ்ட்ரியை நம்பி இருப்பவர்கள் தாராளமாக சம்பாதிக்க வழி காட்டும் முயற்சியில் சுதாகரண்ணா இறங்கி இருக்கிறார்’ என்கிறார்கள்.

error: Content is protected !!