வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி48 ராக்கெட்!

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி48 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்.எல்.வி-சி 48இல் செலுத்தப்பட்ட ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றி கரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார். அத்துடன் குழுவில் பணியாற்றிய ஒவ்வொருவரின் பெயரை கூறியும் இஸ்ரோ தலைவர் சிவன் வாழ்த்து தெரிவித்தார்.

புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு உதவும் ரிசாட்-2பி ஆா்1 செயற்கைக்கோளை தாங்கியபடி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவு தளத்திலிருந்து பிற்பகல் 3.25 மணி அளவில் விண்ணில் பி.எஸ்.எல்.வி சி 48 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் 628 கிலோ எடைகொண்ட தாகும். வேளாண், வனக் கண்காணிப்பு, பேரிடா் மேலாண்மை மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு உதவுவதற்காக அனுப்பப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் புவியிலிருந்து 576 கி.மீ. தொலை விலான சுற்றுவட்டப் பாதையில் 37 டிகிரி கோணத்தில் நிலை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில் பிஎஸ்.எல்.வி-சி 48இல் செலுத்தப்பட்ட ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “பிஎஸ்.எல்.வி-சி 48 -ல் அனுப்பப்பட்ட சென்ற ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தபட்டுள்ளது.அத்துடன் வெளிநாடுகளை சேர்ந்த மற்ற 9 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

அந்த வகையில் பிஎஸ்.எல்.வி-ராக்கெட் வரிசையின் 50வது பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்த திட்டத்தில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முக்கியமாக ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 75வது ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!