சொத்து வரி : சென்னை மாநகராட்சியின் சலுகை அறிவிப்பு!

சொத்து வரி : சென்னை மாநகராட்சியின் சலுகை அறிவிப்பு!

க்டோபர் 15-–ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத சலுகை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் முதல் அரையாண்டில் செப்டம்பர் வரையிலும் அடுத்த அரையாண்டு ஏப்ரல் வரையிலும் சொத்துவரி செலுத்தலாம். இந்த நிலையில், பொதுமக்கள், சொத்துவரி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக, 2-–ம் அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபர் 15–ம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல், 2022–-2023–ம் ஆண்டுக்கான முதல் அரையாண்டுக்கான சொத்து வரியில் உயர்த்தப்பட்ட தொகையை இதுவரை செலுத்தாதவர்களுக்கு விதிக்கப்படும் 2 சதவீத அபராதத் தொகையையும் தள்ளுபடி செய்வதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும், சொத்து வரியை ‘நம்ம சென்னை’ செயலி மூலமாகவும், ‘கியூஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்தும், இ-–சேவை மையங்களிலும், வரி வசூலிப்பவர்களிடம் நேரடியாகவும் செலுத்தலாம் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

error: Content is protected !!