பிரியங்கா காந்தியின் தமிழக வருகை ரத்து!- ஏன் தெரியுமா? வீடியோ

பிரியங்கா காந்தியின் தமிழக வருகை ரத்து!- ஏன் தெரியுமா? வீடியோ

மிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் அசாம், மேற்குவங்கத்தில் 2 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் தமிழகம், புதுவை மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனிடையே தேசிய தலைவர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரங்களிலுன், பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு வருகின்றனர்.

இதனிடையே நாடெங்கும்கொரோனா இரண்டாம் அலை என்ற பெயரில் பரவி வருகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 10 வேட்பாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அரசியல் பிரமுகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நளை தமிழ்நாடு வர இருந்த சூழ்நிலையில் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் வந்ததால் அவர் தன்னை வீட்டிலேயே சுயமாக தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதோரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் பிரியங்கா காந்திக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்றே வந்துள்ளது. ஆனாலும் டாக்டர்கள் அவரை வீட்டுத்தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியதால் பிரியங்கா தன்னை வீட்டிலேயே சுயமாக தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!