நாட்டில் கொரோனா பரவல் அதிகரிப்பு_ பிரதமர் மோடி ஆலோசனை!

நாட்டில் கொரோனா பரவல் அதிகரிப்பு_ பிரதமர் மோடி ஆலோசனை!

ந்தியாவில் கொரோனா, ஒமைக்ரான் தொற்றுநோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததால் பிரதமர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், மருத்துவ கட்டமைப்புகளை தயார்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

நாட்டின் சுகாதார உட்கட்டமைப்புகள், மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் உபகரணங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நரேந்திர மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

மாலை 4.30 மணியளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆலோசனை கூட்டத்தில் அமித் ஷா, மன்சுக் மாண்டவியா, உயரதிகாரிகள், அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

error: Content is protected !!