இலங்கைக்கு 110 கோடி மானியம்!- இந்திய பிரதமர் அறிவிப்பு!

இலங்கைக்கு 110 கோடி மானியம்!- இந்திய பிரதமர் அறிவிப்பு!

இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான காணொளி உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில், இந்திய பிரதமர் மோடி இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் ஆலோசனை நடத்திய போது. தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு 13ஆவது அரசியல் சட்ட திருத்தப்படி அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் படியும் சமத்துவம் நீதி கௌரவம் ஆகியவற்றை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்தியா – இலங்கை இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர். இலங்கை பிரதமராக ராஜபக்சே மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவது இதுதான் முதல் தடவையாகும். அதில், இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசப்பட்டது.

இது குறித்து கூறியுள்ள இந்தியப் பெருங்கடல் பிராந்தியப் பிரிவு இணைச் செயலாளர் அமித் நரங் “இலங்கை இந்தியா இடையிலான புத்தமத ரீதியிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு இந்திய மதிப்பில் 110 கோடி மானியம் வழக்கப்படும்”என்று பிரதமர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து “இலங்கையில் இருந்து புத்த யாத்ரீகர்கள் குழு வருவதற்கு இந்தியாவில் வசதிகள் செய்யப்படும். அதற்காக உத்தரபிரதேசத்தின் குஷி நகரில் இருந்து விமானம் இயக்கப்படும். கொரோனா தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க, இந்தியா 400 மில்லியன் டாலர் பணப்பரிமாற்ற வசதியை இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கியுள்ளது. தற்போதைய கரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் காணொளி உச்சி மாநாடு வெற்றிகரமாக நடந்துள்ளது.

சில பொருட்களின் இறக்குமதிக்கு இலங்கை தற்காலிக தடை விதித்துள்ளது. அதற்கு விரைவில் தளர்வுகள் வழங்கப்படும். இதன் மூலம் இலங்கை பொருளாதாரத்திற்கும், பொது மக்களுக்கும் பயன் கிடைக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மையத்தை திறக்க, வரும்படி பிரதமர் மோடிக்கு, இலங்கை பிரதமர் ராஜபக்சே அழைப்பு விடுத்தார்.

என்று அமித் நரங் தெரிவித்தார்.

error: Content is protected !!