பேயுடன் திருமணம் செய்து ’அதை’ விவாகரத்தும் செய்த ஐரிஷ் பெண்மணி!

பேயுடன் திருமணம் செய்து ’அதை’ விவாகரத்தும் செய்த ஐரிஷ்  பெண்மணி!

வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண்மணி 300 வருடங்கள் பழமையான பேயை திருமணம் செய்து, அதை விவாகரத்து செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடக்கு அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் அமான்டா டீகியூ இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு 1700-களில் நடந்த ஒரு சம்பவத்தை கதையாக எழுத துவங்கினார். அப்பொழுது அவரை சுற்றி ஏதோ ஒரு சக்தி சுற்றி வருவதாக உணர்ந்தார். அதனுடன் தொடர்பு கொண்டு பேசியபோது அந்த அமானுஷ்ய சக்தியின் பெயர் ஜாக் என்றும் இவர் 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்றும், அவர் கடற் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்ததாக அமான்டா தெரிவித்தார். இதையடுத்து அவர் அந்த அமானுஷ்ய சக்தியுடன் டேட்டிங் செய்ய துவங்கினார். ஒரு கட்டத்தில் அந்த பேயையே அமான்டா திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது இருவரும் பிரிந்து விட்டதாக அமான்டா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்; “நாங்கள் டேட்டிங் செய்ய துவங்கிய போது தான் அவர் தனது மற்றொரு பக்கத்ததை காட்ட துவங்கினார். அது சரியானதாக இல்லை. அவர் எனது உடலுக்குள் புகுந்து எனது எனர்ஜியை காலியாக்கினார். இதனால் எனது உடல் அதிகமாக பாதிக்கப்பட்டது. அதனால் அவரை விட்டு விலக நினைத்தேன். அதனால் அவர் என்னை கொல்ல முயற்சி செய்தார். இதனால் வேறு வழியின்றி பேயோட்டும் முயற்சியை செய்து அவரை பிரிந்து விட்டேன். தற்போது எனது உடல் நிலை நன்றாக தேர்ச்சி பெற்றுள்ளது” என கூறினார்.

பிரபல ஹாலிவுட் திரைப்படமான “பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்” திரைப்படத்தில் வரும் ஜாக் ஸ்பேரோ என்ற கதாபாத்திரத்தை உண்மையில் ஒரு பெண் அவரை பேயாக திருமணம் செய்து விவாகரத்தும் செய்தாக இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Posts

error: Content is protected !!