யானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி!

யானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி!

யானை என்பது காட்டுயிர், அது காட்டில்தான் இருக்க வேண்டும். இச்சூழலில் கோயில் யானைகள் பராமரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட், தமிழகத்தில் கோயில் யானைகள், வளர்ப்பு யானைகள், வனத்துறை யானைகளின் எண்ணிக்கை, அவற்றின் வயது, உடல்நிலை குறித்த அறிக்கையுடன், அவற்றின் வீடியோ பதிவையும் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கோயில்களின் கட்டுப்பாட்டில் 32 யானைகளும், தனியார் கட்டுப்பாட்டில் 31 யானைகளும், வனத்துறை கட்டுப்பாட்டில் 67 யானைகளும் உள்ளதாகவும், அவற்றை வீடியோ பதிவு செய்யும் பணிகள் நடந்து வருவதால், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுத்தரப்பில் கோரப்பட்டது.

வளர்ப்பு யானைகள் குறித்து சில முடிவுகளை எடுக்கும் நோக்கில் தொடரும் இந்த விசாரணையில். யானை வீட்டு விலங்குகள் அல்ல. என்ற கோரிக்கையை ஏற்று, இனிமேல் தமிழகத்தில் தனியார் எவரும் யானையை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது என உத்தரவிட்டனர்.

மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் வளர்ப்பு யானைகள், கோவில் யானைகள், வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த யானைகள் குறித்த விவரங்களையும் தாக்கல் செய்ய நீதிபதிகள், அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

error: Content is protected !!