நீட் நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 17–ந்தேதி நடைபெறும் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

நீட் நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 17–ந்தேதி நடைபெறும் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

ளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 17–ந்தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பு மாணவர்களுக்கு இந்திய அளவில் நீட் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. இந்த நுழைவுத்தேர்வை தேசியத் தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்தி, தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நீட் நுழைவு தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நீட் தேர்விற்கு எதிராக மசோதா நிறைவேற்றி தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து நீட் தேர்வு மசோதா மீது விரைவாக நடவடிக்கை எடுத்து ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17–ந்தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு நாளை மறுநாள் (2–ந்தேதி) முதல் மே 7–ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 16.4 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு 20 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!