அட்வான்ஸ் புக் பண்ணிய ரயில் டிக்கெட் நேம் சேஞ்ச் பண்ணிக்கலாம்! – ரயில்வே அறிவிப்பு

அட்வான்ஸ் புக் பண்ணிய ரயில் டிக்கெட் நேம் சேஞ்ச் பண்ணிக்கலாம்! – ரயில்வே அறிவிப்பு

வேற வழியே இல்லை-ங்கற காரணத்திற்காக ட்ரெயின்லே ட்ராவல் செய்ய முடியாம போனா, அட்வான்ஸ் புக்கிங் செஞ்ச ரயில் டிக்கெட்டை வேறு நபரின் ஏஏருக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவிச்சிருக்குது.

உலகத்துலேயே 4-வது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கா நம்ம இண்டியன் ரயில்வே கீது. டெய்லி லட்சக்கணக்கான ஜனங்க இந்திய ரயில்வேயின் சேவையை பயன்படுத்தி வாராய்ங்க.

குறிப்பிட்ட நாளில் பயணிப்பதற்காக முன்பதிவு செய்யக் கூடிய வசதியும் இந்திய ரயில்வேயில் உள்ளது. இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் முன்பதிவு செய்து இருக்கை உறுதியான பின்பும் நம்மால் பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்றால் அதனை வேறு ஒருவருக்கு மாற்றிக்கொடுக்கும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செஞ்சைச்ருக்குது

இந்திய ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்டு முக்கிய ரயில் நிலையங்களில் பணியாற்றும் தலைமை முன்பதிவு மேற்பார்வையாளர் கள் மூலம், வேறு ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டை மாற்றிக்கொள்ளலாம். அப்படி முன்பதிவு செய்தவர் பெயரை மாற்றுவதற்கான வழிமுறைகளும் நிபந்தனைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதாவது அரசு ஊழியராக இருந்தால் பணியின் காரணமாக செல்லும் போது, 24 மணி நேரம் முன்பாக எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்து பெயரை மாற்றிக் கொள்ளலாம்.

இதே மாதிரி பயணிகளும் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பாக தமது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தனது பெயரில் பதிவு செய்த ரயில் டிக்கெட்டை மாற்றிக் கொள்ள கோரிக்கை விடுக்கலாம்.

மாணவர்கள் பெயரில் பள்ளி, கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட டிக்கெட்டுகளையும் வேறு மாணவர்கள் பெயரில் 48 மணி நேரம் முன்பாக மாற்றிக் கொள்ளலாம்.

தேசிய மாணவர் படையினருக்கும் இந்த வசதி அளிக்கப்படுகிறது. இதேபோல் திருமண நிகழ்ச்சிக்காக மொத்தமாக ரயில் பயணம் செய்பவர்கள், 24 மணி நேரத்துக்கு முன்பாக கடிதம் எழுதி கொடுத்து இந்த வாய்பை பயன்படுத்திக் கொள்ளலாம் அப்படீன்னு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்குது

error: Content is protected !!