சமூக ஊடகங்களை கண்காணிக்க கண்காணிப்பு குழு – டி.ஜி.பி ஆர்டர்!

சமூக ஊடகங்களை கண்காணிக்க கண்காணிப்பு குழு – டி.ஜி.பி ஆர்டர்!

ன்றைய காலக்கட்டத்தில் பலரால் பயன்படுத்தப்படும் சமூக ஊடகங்களில் வதந்திகளைப் பரப்பி குழப்பம், சண்டை கலவரங்களை ஏற்படுத்தும் நபர்களைக் கண்காணிக்க தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட சமூக ஊடகக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,” யூடியூப், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பொய்யானத் தகவல்களைப் பதிவு செய்து, வதந்திகளைப் பரப்பி அதன்மூலம் குழப்பங்களையும், சண்டைகளையும், கலவரங்களையும், காவல் துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் நபர்களைக் கூர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதுபோல இணைய வழியில் பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் விற்பனை, பண மோசடி போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டுபிடிக்கவும் தேவை ஏற்பட்டுள்ளது. அதற்காக சென்னை உட்பட 9 மாநகரங்களிலும், 37 மாவட்டங்களிலும் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட சமூக ஊடகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கணினிசார் திறன் சைபர் தடய அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் தெரிவு செய்யப்பட்டு, இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.இக்குழு சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் பொய்யான பதிவுகளை சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து அந்த வதந்தி பதிவுகளை நீக்கவும், அவர்களின் சமூக ஊடகக் கணக்குளை முடக்கவும், கணினிசார் குற்ற வழக்குகளைப் பதிவு செய்வதற்கும் இக்குழு துரிதமாக செயல்படும். இந்த நடவடிக்கையின் மூலம் சாதி, மத, அரசியல் மோதல்களைத் தடுத்திடவும் இக்குழு உதவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!