March 31, 2023

ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க போவது யார்?-ஐகோர்ட் கேள்வி

ஜெயலலிதாவின் சொத்துக்களை யார் நிர்வகிப்பது என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தீபா மற்றும் தீபக் ஆகியோருக்குச் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பெயரில் ஹைதராபாத்தில் திராட்சை தோட்டம், வீடு, சென்னை போயஸ் கார்டன் வீடு மற்றும் கொடநாடு எஸ்டேட் என சுமார் ரூ.913 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன. அவர் உடல்நலம் குன்றி 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தார்.ஜெயலலிதா மறைவுக்கு பின்னர்கட்சியில் பல்வேறுதிருப்பங்கள்மரணத்தில் மர்மம் என பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன அந்தவகையில்ஜெயலலிதா தனது சொத்து தொடர்பாக உயில் எழுதி வைக்காததால்அவரது சொத்துக்கள் நிர்வகிப்பது தொடர்பாகவும் பிரச்னைகள் எழுந்து வரும் நிலையில், இந்த சொத்துக்களை எல்லாம் நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த அதிமுக நிர்வாகி புகழேந்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ஜெயலலிதாவுக்கு ரத்த சொந்த வாரிசு கள் உள்ளதால், இந்த சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க முடியாது என கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து புகழேந்தி தாக்கல் செய்த மேல் முறையீடு மனு இன்று (நவம்பர் 15) நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “ஜெயலலிதாவின் பெயரில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா பிறப்பித்த தீர்ப்பில் அந்தச் சொத்துக்கள் குறித்துக் குறிப்பிடப் பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

மேலும், ஜெயலலிதா அண்ணன் வாரிசுகள் என தீபா மற்றும் தீபக் ஆகிய இருவர் உள்ள நிலையில், ஜெயலலிதாவின் சொத்துகளை யார் நிர்வகிப்பது என்பது குறித்து இருவரும் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.