“ஜெ. ஜெயலலிதா ஆகிய நான்..!” – 23ம் தேதி பதவியேற்பு

“ஜெ. ஜெயலலிதா ஆகிய நான்..!” – 23ம் தேதி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி அதிமுக 120 இடங்களிலும் திமுக 103 இடங்களிலும் வென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் அதிமுக வென்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. முழுமையான தேர்தல் முடிவுகள் வராதபோதிலும் கிட்டத்தட்ட அதிமுக ஆட்சி அமைப்பது உறுதியாகி வரும் 23ம் தேதி பொறுப்பேறக இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து பிரதமர், ஆளுநர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகரிகள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினர்.

jaya may 19

இதையடுத்து கூடியிருந்த தொண்டர்களிடையே ஜெயலலிதா பேசும் போது, “தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 1984-ம் ஆண்டுக்குப் பிறகு இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்சி சாத்தியமாகியுள்ளது. எனது நெஞ்சத்தின் அடித்தளத்தில் எழுகின்ற நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வார்த்தை, தமிழ் அகராதியில் இல்லை.

இத்தேர்தலில் பெரிய கூட்டணி இல்லாதபோதிலும் ஆண்டவனையும் மக்களையும் கூட்டணியாகக் கொண்டு களம் கண்டேன். மக்கள் என்னைக் கைவிடவில்லை. தமிழக மக்கள் மீது அளவற்ற நம்பிக்கை வைத்துள்ளேன். அந்த நம்பிக்கையை மக்கள் வீண்போகச் செய்யவில்லை.

மக்களால் நான், மக்களுக்காக நான் என்பதே எனது தாரக மந்திரம். இதே தாரக மந்திரத்தின் அடிப்படையில் இனியும் தொடர்ந்து செயல்படுவேன். எனது வாழ்க்கையை தமிழக மக்களுக்கு அர்ப்பணித்துள்ளேன். என்றென்றும் மக்கள் தொண்டில் என் வாழ்வை அர்ப்பணிப்பேன். இத்தருணத்தில் அதிமுகவின் அமோக வெற்றிக்கு உழைத்த கட்சியின் தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். இது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், ”நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுகவுக்கு மகத்தான வெற்றியை அளித்து, என்னை மீண்டும் தொடர்ந்து முதல்வராக தேர்ந்தெடுத்து, ஒரு சரித்திரச் சாதனையை ஏற்படுத்திய தமிழக மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியை எனக்கு அளித்த பெருமை தமிழக மக்களாகிய உங்களையே சாரும். இந்த வெற்றியை எனக்கு அளித்த தமிழக மக்களின் பால் எனக்கு எழுகின்ற உணர்ச்சிப் பெருக்கு, உள்ளத்தில் எழுகின்ற நன்றி உணர்ச்சி இவைகளை விவரிக்க அகராதியில் வார்த்தைகளே இல்லை.

தி.மு.க-வின் பொய் பிரச்சாரங்களை பொடிப் பொடியாக்கி, உன்னதமான, உத்தமமான, உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டிய தேர்தல் இந்தத் தேர்தல். குடும்ப ஆட்சிக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் இந்தத் தேர்தல். குடும்பத்தோடு வாக்கு கேட்டவர்களை குழிதோண்டி புதைத்த தேர்தல் இந்தத் தேர்தல். தமிழக மக்களை நம்பாமல் கருத்துக் கணிப்புகளை நம்பிய கட்சிக்கு எதிர்பார்த்த தோல்வியைக் கொடுத்த தேர்தல் இந்தத் தேர்தல்.

என் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, எனது அன்பான வேண்டுகோளினை ஏற்று, மகத்தான, அபரிமிதமான, அளப்பரிய வெற்றியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அளித்துள்ள தமிழக மக்களுக்கு என்றென்றும் நான் நன்றிக் கடன் பட்டவளாக இருப்பேன் என்றும்; தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்றும்; இந்தியாவிலேயே தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்க தொடர்ந்து அல்லும், பகலும் அயராது உழைப்பேன் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு, 1984-ஆம் ஆண்டுக்கு பிறகு, தொடர்ந்து ஆட்சியில் உள்ள கட்சியே வெற்றி பெற்ற பெருமையை எனக்கு அளித்த தமிழக மக்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், தோழமை கட்சித் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன்.புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள ஏழு சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி” என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், “வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் (நம்மைச்) சேரும் என்ற இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பாடல் வரிகளுக்கேற்ப, நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மகத்தான வெற்றியை அளித்து, என்னை மீண்டும் தொடர்ந்து முதலமைச்சராக தேர்ந்தெடுத்து, ஒரு சரித்திரச் சாதனையை ஏற்படுத்திய எனதருமை தமிழக மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வெற்றியை எனக்கு அளித்த பெருமை தமிழக மக்களாகிய உங்களையே சாரும். இந்த வெற்றியை எனக்கு அளித்த தமிழக மக்களின் பால் எனக்கு எழுகின்ற உணர்ச்சிப் பெருக்கு, உள்ளத்தில் எழுகின்ற நன்றி உணர்ச்சி இவைகளை விவரிக்க அகராதியில் வார்த்தைகளே இல்லை.

தி.மு.க-வின் பொய் பிரச்சாரங்களை பொடிப் பொடியாக்கி, உன்னதமான, உத்தமமான, உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டிய தேர்தல் இந்தத் தேர்தல். குடும்ப ஆட்சிக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் இந்தத் தேர்தல். குடும்பத்தோடு வாக்கு கேட்டவர்களை குழிதோண்டி புதைத்த தேர்தல் இந்தத் தேர்தல். தமிழக மக்களை நம்பாமல் கருத்துக் கணிப்புகளை நம்பிய கட்சிக்கு எதிர்பார்த்த தோல்வியைக் கொடுத்த தேர்தல் இந்தத் தேர்தல்.

என் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, எனது அன்பான வேண்டுகோளினை ஏற்று, மகத்தான, அபரிமிதமான, அளப்பரிய வெற்றியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அளித்துள்ள தமிழக மக்களுக்கு என்றென்றும் நான் நன்றிக் கடன் பட்டவளாக இருப்பேன் என்றும்; தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்றும்; இந்தியாவிலேயே தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்க தொடர்ந்து அல்லும், பகலும் அயராது உழைப்பேன் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்.

இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, 1984-ஆம் ஆண்டுக்கு பிறகு, தொடர்ந்து ஆட்சியில் உள்ள கட்சியே வெற்றி பெற்ற பெருமையை எனக்கு அளித்த தமிழக மக்களுக்கும், இந்தத் தேர்தலில் மெய் வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல், `கருமமே கண்ணாயினார்’ என்பதற்கேற்ப, ஓயாமல் கழகத்தின் வெற்றிக்காக உழைத்த ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான, எனது அருமை கழக உடன் பிறப்புகளுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், தோழமை கட்சித் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள ஏழு சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!