ஐபிஎல் – தோனியிடமிருந்து கேப்டன் ஷிப்பை பறித்தது புனே டீம் நிர்வாகம்!

ஐபிஎல் – தோனியிடமிருந்து கேப்டன் ஷிப்பை பறித்தது புனே டீம் நிர்வாகம்!

ஐ.பி.எல். தொடரில் எழுந்த ‘மேட்ச் பிக்சிங்’ புகார்களைத் தொடர்ந்து சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. சென்னை அணிக்காக விளையாடி வந்த பெரும்பாலான வீரர்கள், கடந்த ஆண்டு புதியதாக உருவாக்கப்பட்டுள்ள புனே அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை, புனே அணி நிர்வாகம் 12.5 கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்தது. அதன்படி சென்ற ஐ.பி.எல். தொடரில் புனே அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டார். ஆனால் தோனி தலைமையிலான புனே அணி கடந்த ஆண்டு அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை.

pune feb 19

இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ள புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி நீக்கப் படுவதாக அணி நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது. இருப்பினும் வருகின்ற தொடரில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் மட்டும் அவர் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தோனிக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் வருகின்ற ஐ.பி.எல். தொடரில் புனே அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நீக்கம் செய்யப்பட்டது ஏன் என்று அந்த அணியின் உரிமையாளர் சஞ்சிவ் கோயின்கா  விளக்கம் அளித்துள்ளார்.  சஞ்சிவ் கோயின்கா கூறியதாவது:-

“தோனி நீக்கம் செய்யப்படவில்லை. வருகின்ற தொடருக்கு ஸ்டீவ் சுமித்தை கேப்டனாக நாங்கள் நியமித்துள்ளோம். வெளிப்படையாக சொல்வதென்றால், கடந்த தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. அதனால் வருகின்ற 10-வது ஐ.பி.எல். தொடருக்கு புதிய இளம் வீரரை கேப்டனாக தேர்வு செய்ய விரும்பினோம்.ஒரு தனி நபராகவும், அணித் தலைவராகவும் தோனி மீது அதிக மதிப்பு வைத்துள்ளேன். தோனி தொடர்ந்து அணி வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார்”இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!