சாம்பியன்ஸ் டிராபி ; வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!

சாம்பியன்ஸ் டிராபி  ; வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!

பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில், நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தார், இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சௌமியா சர்க்கார் ரன் ஏதும் எடுக்காமலும், சப்பீர் ரஹ்மான் 19 ரன்களிலும் புவனேஸ்வர் குமார் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து தமிம் இக்பாலுடன் ஜோடி சேர்ந்த முஷ்குபிர் ரஹீம் ஜோடி சீராக ரன்களை குவித்தது.

இந்த ஜோடி 123 ரன்களை சேர்த்தது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். தமிம் இக்பால் 70, முஷ்குபிர் ரஹீம் 61 ரன்களில் கேதார் ஜாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். இறுதியில் வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து ரன்கள் எடுத்தது. இந்திய அணி பந்து வீச்சில் கேதார் ஜாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் – தவான் களமிறங்கினர். ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடி தவான் வங்கதேச பவுலர்களை அடித்து நொறுக்கினார். முதல் விக்கெட்டுக்கு ரோகித் – தவான் ஜோடி 87 ரன்கள் எடுத்தது. தவான் 34 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து கேப்டன் கோலி ரோகித் ஜோடி சிரான வேகத்தில் ரன்களை குவித்தனர். ரோகித் 111 பந்துகளில் தனது 11-வது சதத்தை பதிவு செய்தார். கோலியும் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன்

வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து வரும் 18-ம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானுடன் பலப்பரிட்சை நடத்த உள்ளது.

error: Content is protected !!