உயிர் மீது அக்கறை, ஆசை இருந்தால் முகக்கவசம் அணிய வேண்டும் – மா.சுப்பிரமணியன் அறிவுரை!

உயிர் மீது அக்கறை, ஆசை இருந்தால் முகக்கவசம் அணிய வேண்டும் – மா.சுப்பிரமணியன் அறிவுரை!

மிழகத்தில் முகக்கவசம் அணிவது விலக்கு அளிக்கப்படவில்லை. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் என்ற முறை மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

சைதாப்பேட்டை மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் புதிதாகக் கட்டப்பட்ட தொழிலாளர் ஓய்வு அறையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், “திமுக அரசு பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்து மாபெரும் புரட்சியை செய்துள்ளது. பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயனம் அவர்கள் தங்களது சொந்த காலில் நிற்க வழி வகுத்துள்ளது. பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் அறிவித்த நாள் முதல் தற்போது வரை பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்வது 40 சதவீதத்தில் இருந்து 61 சதவீதமாக உயர்ந்துள்ளது. முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி போக்குவரத்து தொழிலாளர்கள் அகவிலைப்படி உயர்வு பற்றி முடிவு எடுக்கப்படும். புதிய பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தொற்று உலக அளவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் டெல்லி, மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் என்பதில் இருந்து தான் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர், மால்கள் போன்ற இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும். கடந்த 1 மாதமாக கொரோனா பாதிப்பு 50-க்கும் கீழாக குறைந்து இறப்பு விகிதம் பூஜ்ஜியம் ஆக உள்ளது. மருத்துவமனைகளில் 1, 2 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 200 பேர் என்ற அளவில் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

தமிழகத்தில் பதட்டமான சூழ்நிலை இல்லை. ஆனால் அதே நேரத்தில் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் முகக்கவசம் அணிவது விலக்கு அளிக்கப்படவில்லை. அதேபோல், தனிமனித இடைவெளிக்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் என்ற முறை மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளி, கிருமி நாசினி, முகக்கவசம் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் தங்களின் உயிர் மீது அக்கறை, ஆசை இருந்தால் முகக்கவசம் அணிய வேண்டும். தமிழகத்தை பொறுத்த வரையில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் உயிர் இழப்பை தவிர்ப்பது தான் முக்கியம். விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை விபத்து நடந்த இடத்திற்கு அருகில் அரசு மருத்துவமனை இருந்தும் அதை தவிர்த்து தொலைவில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அந்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!