நானும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கேன் – பாஜக எம்.பி. பூனம் மகாஜன் பகீர்!

நானும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கேன் – பாஜக எம்.பி. பூனம் மகாஜன் பகீர்!

கடந்த 2011-ம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 7,112 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 33,098 குழந்தைகள் பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் வந்த செய்தியின் அதிர்ச்சியே விலகாத நிலையில் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் தன்னையும் சேர்த்து ஒவ்வொரு இந்திய பெண்ணும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறோம் என பாஜக எம்.பி பூனம் மகாஜன் தெரிவித்து மேலும் அதிர்வலையை கிளப்பி உள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.டி தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பாஜக இளைஞர் அணியின் தேசிய தலைவரும், மும்பை வடக்கு தொகுதியின் எம்.பி-யுமான பூனம் மகாஜன் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கல்லூரி படிக்கும் காலத்தில் தினசரி புறநகர் ரயிலில் பயணிக்கும் போது, யாரென்றே தெரியாதவர்கள் பலரின் பார்வையும் ஏற்றுக்கொள்ளாத வகையில் தன் மீது படும் என்றும் அனைத்து பெண்களுமே ஒருகட்டத்தில் இதனை அனுபவித்திருப்பார்கள் என்றும் பூனம் மகாஜன் தெரிவித்தார்.

மேலும், இது உலகம் முழுவதும் இருக்கும் பிரச்சனை என்றாலும், குறிப்பாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணிற்கும் இதைப் போன்ற அனுபவங்களையும் பெற்றிருப்பார்கள், சிலர் பாலியல் சீண்டல்களுக்கும் ஆளாகியே இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

குறிப்பிட்ட சில நேரங்களில் அமெரிக்காவைக் காட்டிலும் இந்தியா பெண்களுக்கு மரியாதை அளிக்கும் நாடாகவே இருந்து வருகின்றது, எனக் கூறிய மகாஜன், அமெரிக்காவில் இதுவரை ஒரு பெண்ணால் அதிபர் என்ற உயரிய பதவியில் அமர முடியாத நிலையில், இந்தியாவில் பெண்களால் குடியரசுத் தலைவராகவும், பிரதமராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், முதலமைச்சர்களாகவும் வர முடிந்திருக்கிறது என்றார். பெண்களின் பிம்பத்தை சீரழித்துவிட்டதாக இந்தி தொலைக்காட்சித் தொடர்களையும் அவர் கடுமையாக சாட்டினார்.

Related Posts

error: Content is protected !!