என் தந்தையை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன்!- ராஜிவ் நினைவு நாளில் ராகுல்காந்தி ஃபீலிங்!

என் தந்தையை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன்!- ராஜிவ் நினைவு நாளில் ராகுல்காந்தி ஃபீலிங்!

ராஜிவ் காந்தி நினைவு நாளான இன்று, அவருடைய மகனும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, என் தந்தையை ரொம்ப மிஸ் செய்கிறேன்” என உருக்கமாக நினைவஞ்சலியை தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தி, 1991-ஆம் ஆண்டு மே 21-ம் தேதி திருப்பெரும்புதூரில் தற்கொலைப்படையை சேர்ந்தவர்களால் குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரை நினைவு கூறும் வகையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ராஜிவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி `என்றென்றும் எங்கள் இதயங்களில்’ என்ற சிறிய வீடியோவுடன் பதிவிட்டிருந்த அந்த கமெண்டில் கூறி இருப்பதாவது:–

“என் தந்தை ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர், அவரின் கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது. அவர் கனிவானவர் மற்றும் இரக்க குணம் உடையவர்.

அதுமட்டுமல்லாமல் எனக்கும், பிரியங்காவுக்கும் அற்புதமான தந்தை. எனக்கும், பிரியங்காவுக்கும் மன்னிக்கக் கற்றுக்கொடுத்தவர் என் தந்தை. என் தந்தையை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன். நாங்கள் ஒன்றாக இருந்த நேரத்தை அன்புடன் நினைத்துப் பார்க்கிறேன்” என ராகுல்காந்தி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாகச் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், கடந்த 18-ஆம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்பால் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!