Exclusive

யோகிபாபுவின் ‘ஷூ’ திரைப்பட விழாவின் ஹைலைட்ஸ்!

நெட்கோ ஸ்டுடியோஸ் (Netco Studios) சார்பில் நியாஷ், கார்த்திக் மற்றும் ஏடிஎம் புரொடக்‌ஷன்ஸ் (ATM Productions) டி.மதுராஜ் நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் திரில்லர் காமெடி திரைப்படம் ஷூ. இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். புதுமையான திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவினில் திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவினில் தயாரிப்பாளர் நியாஷ் பேசியது…..

தமிழ் சினிமாவில் சிறந்த படங்களைத் தருவதை மட்டுமே நோக்கமாக்க் கொண்டு தயாரிப்பில் இயங்கியுள்ளோம். எங்களது முதல் திரைப்படமாக கல்யாண் இயக்கத்தில் ‘ஷூ’ திரைப்படம் உருவானது எங்களுக்கு மகிழ்ச்சி. அடுத்து பல திரைப்படங்களை வரிசையில் வைத்துள்ளோம். உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை. தொடர்ந்து நல்ல படங்கள் தருவோம் நன்றி என்றார்.

தயாரிப்பாளர் கார்த்திக் பேசியது…..

இது எங்களுடைய முதல் திரைப்படம்.குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கபட்ட கதை. இந்தப்படத்தை இயக்குநர் கல்யாண் மிகவும் சிரமப்பட்டு சிறப்பாக உருவாக்கியுள்ளார். இந்தப்படத்தை தியேட்டரில் நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் கேட்டுகொள்கிறேன் என்றார்.

நடிகை ஷஞ்சிதா ஷெட்டி பேசியது.…..

படத்தின் தலைப்பு ஷூ என்று இருந்தாலும், இந்தப்படத்தின் கரு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது. குழந்தைக் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கபட்ட இந்தக்கதை இந்த சமூகத்திற்கு மிக முக்கியமானது. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும், மரியாதை கொடுப்பதும் மிக அவசியமான ஒன்று. இந்தப்படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள் என்றார்.

நடிகை கோமல் ஷர்மா பேசியதாவது……..

இது போன்ற கதைக்களத்தை உருவாக்கி அதைத்திரைப்படமாக மாற்றுவது மிகவும் சவாலான விஷயம், இப்படம் உருவாக தயாரிப்பாளர் தான் காரணம். சமூக்க்கருத்துகள் கொண்ட இந்தத்திரைப்படத்தை எடுத்ததற்கு கல்யாண் அவர்களுக்கு நன்றி. இப்போதைய சமூகத்திற்கு தேவையான கருத்துகளைக் கொண்ட திரைப்படமாக இது உருவாகியுள்ளது. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசியது……

புது தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு வருவது, ஆரோக்கியமான விஷயம். இயக்குநர் கல்யாண் தயாரிப்பாளர்களுக்கான இயக்குநர். யோகிபாபுவிற்கு இப்போது அதிக வரவேற்பு இருக்கிறது. அவர் இருப்பதனாலே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்து இந்தப்படத்தை உருவாக்கியது இந்தப்படத்திற்கு மேலும் ஒரு பலம். அதனால் இந்தப்படமும் நன்றாக வந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.

படத்தின் இயக்குநர் கல்யாண் பேசியது……

தயாரிப்பாளர் கடின உழைப்பைக் கொடுத்து இந்தப்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்தப்படத்தில் தொழில்நுட்பக்கலைஞர்கள் உடைய பங்கு மிகப்பெரியது. இந்தப்படத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்கள் உடைய நடிப்பு சிறப்பாக வந்துள்ளது. இந்தப்படம் கண்டிப்பாக வெற்றியடையும். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்றார்.

இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

aanthai

Recent Posts

அக்சய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் 27’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

தமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக…

1 hour ago

இந்தியாவில் மனித உரிமைமீறல்கள் – அமெரிக்கா அறிக்கை!

நம் நாட்டில் மனித உரிமைகளின் நிலைபற்றி ஆய்வுக்கு உட்படுத்துகையில், அது மிகவும் மோசமானதாகவே உள்ளது எனலாம். மனித உரிமை மீறல்கள்…

3 hours ago

டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் பட்ஜெட்டுக்கு பாஜகத் தடை!

இந்தியாவில் தற்போது ஆளும் கட்சியாக இருந்து வரும் பா.ஜ.க., வட மாநிலங்களில் உள்ள பா.ஜ.க அல்லாத ஆளும் கட்சிகளை கவிழ்க்கவும்…

4 hours ago

புகை, குடி காட்சி இல்லாமல் ஒரு படம்: ‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’!

இயக்குநர் சுந்தர் சி யின் உதவியாளர் வி .எம். ரத்தினவேல் எழுதி இயக்கும் 'தலைக்கவசமும் 4 நண்பர்களும்' படத்தின் டீஸரை…

5 hours ago

நாடெங்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய பாடத்திட்டம் அமலாகப் போகுது!

இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் நர்சரி முதல் 2ம் வகுப்பு வரை புதிய கல்வி கொள்கை அடிப்படையில்…

5 hours ago

பி.எப்.7 வைரஸால் இந்தியர்கள் கவலைக் கொள்ள வேண்டாம்!

உலகம் முழுக்க கொரோனா தொற்றைப் பரப்பியதாகச் சொல்லப்படும் சீனாவில் தற்போது ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய…

1 day ago

This website uses cookies.